உயர்நீதிமன்றத்தில் விஷால் விளக்கம்!

Default Image

நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராதாரவியை நீக்கியது பெரும்பாலான உறுப்பினர்கள் எடுத்த முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றதை அடுத்து, முனனாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் ராதாரவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டார்.

இதனையடுத்து, தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஷால் இன்று நேரில் ஆஜராகி, பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் எடுத்த முடிவின் படியே ராதாரவி நீக்கப்பட்டதாகவும், அது தமது தனிப்பட்ட முடிவல்ல என்றும் விளக்கமளித்தார்.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்