இயக்குநரை அடித்த தமிழ் நடிகை..! ஏன்.?
வாழ்க்கை பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்த நிலையில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்கிற எண்ணத்துடன் திரையுலகிற்கு வந்துள்ள அஞ்சலிக்கு கீதாஞ்சலி 2 எனும் பேய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் பிறந்த அமெரிக்காவை சேர்ந்த இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளார். தமிழில் `காளி’ ரிலீசுக்கு பிறகு அஞ்சலி நடிப்பில் `பேரன்பு’, `நாடோடிகள்-2′ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.
அஞ்சலி தற்போது ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் ‘லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது.
இந்த படத்திற்காக சமீபத்தில் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு காட்சிப்படுத்தியது. அந்த காட்சியில் அஞ்சலி, தோசைக்கல்லை கேமராவை நோக்கி வீச வேண்டும். ஆனால், அஞ்சலி வீசிய தோசைக்கல் நேராக இயக்குநர் ராஜூ விஸ்வநாத்தின் நெற்றியை தாக்கி ரத்தக் காயத்தை ஏற்படுத்தியது.