தூத்துக்குடியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 2 நிமிடத்திற்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கருப்பு உடையணிந்து முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசியுள்ளார்.
அவர்பேசியதாவது: ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் வாழும் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் போராடிய அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது? மக்கள் விரும்பி வாக்களித்த தலைவர் இப்போது உயிருடன் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்றும் இதுவரை தெரியவில்லை.
இந்த விஷயத்தில் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நமக்கு இரங்கல் செய்திகள் தேவையில்லை. இதனால் உயிரிழந்தவர்கள் திரும்பி வந்துவிட போகிறார்களா? பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது கவலையளிக்கிறது. போராடுவதற்காக மக்கள் கூடும் போது காவல் துறையினர் இப்படிதான் செயல்படுவதா? மாநில அரசு இதுவரை என்ன செய்தது? இந்த அரசு நிச்சயமாக தூக்கியெறியப்பட வேண்டும்.
இந்த பிரச்சனையில் தீர்வு காணவே விரும்புகிறேன். என்னிடம் அதற்கான தீர்வும் இருக்கிறது. அனைவருக்கும் இந்த செய்தி சென்று சேர வேண்டும் என்பதற்காகவே நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். இந்த விவகாரத்தில் அனைவரது கவனமும் திரும்ப வேண்டும். தமிழர்களுடன் மோத வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி…
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது.…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு…
நாமக்கல் : நேற்று அதிகாலை கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்-களில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் ,…
கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த…