ஆசிஃபா விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி !விஜய் சேதுபதி

Default Image

 நடிகர் விஜய் சேதுபதி,சிறுமி ஆசிஃபா விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அது தகும் என்று ஆதங்கம் தெரிவித்தார்.

திரைப்பட சண்டைக் கலைஞர் கள் சங்கத்தின் 51-வது ஆண்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். விஜய் சேது பதி ரத்த தானம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட ஆசிஃபாவை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக பேசுவர்களைப் பார்க்கும் போது கோபம் வருகிறது. பெண்களை மதிக்க கற்றுக்கொடுப்பது போல், பெண் குழந்தைகளை மதிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நம்முடைய வேலைவாய்ப்போ, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் எதையும் தீர்க்க மாட்டார்கள். ஆனால், நாம் எந்த சாதி, எந்த மதம், எதைக் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பாடம் எடுப்பார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆசீஃபா விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்