அதர்வாவும் , ஸ்ரீதிவ்யாவும் இணைகின்றனர்..!!

Default Image

சில பல கதாநாயகிகளின் போட்டிக்கு மத்தியில், இந்த படத்தை ஸ்ரீதிவ்யா கைப்பற்றி இருக்கிறார். தினேஷ் கார்த்திக் தயாரிக்க, பர்னேஷ் டைரக்டு செய்திருக்கிறார். ஒரு கலைக்கல்லூரியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
‘அஞ்சாதே’ பட புகழ் நரேன், ஆசிஷ் வித்யார்த்தி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் வருகிறார்கள். ஜஸ்டிஸ் பிரபாகர் இசையமைக்க, ராமலிங்கம் ஒளிப்பதிவில், பர்னேஷ் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். இவர் கூறும்போது, “இந்த படம், ஒரு கலைக்கல்லூரியில் நடக்கும் மர்மமான சம்பவங்களின் அடிப்படையில் உருவான கதை. அதனால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதில் காதல் இருக்கிறது. பகை இருக்கிறது. வன்மம் இருக்கிறது. தோழமை இருக்கிறது. இந்த படம், அத்தனை உணர்வுகளும் ஒருங்கிணைந்த படமாக இருக்கும்” என்கிறார்!
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்