ஜெயம் ரவி தற்போது அடங்க மறுபடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்து வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மோகன் ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அடங்க மாரு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, தனி ஒருவன்-2 வில் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக இருக்கும் மற்றோரு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று ஜெயம் ரவியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது.
அதாவது ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருக்கிறது என்றும் இந்த படைத்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் என்றும் ஒரு வீடியோ பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோ பதிவில் பிரபல கதாநாயகி காஜல் அகர்வால், பிரபல இசை அமைப்பாளர் என்று இப்படத்தில் பல பிரபலங்கள் பங்குபெற இருக்கிறார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அத்துடன் இது ஜயம் ரவியின் 24-வது படம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…