Categories: சினிமா

அசுரவதம் படத்தில் தன்னுடன் நடிக்க மறுத்த கதாநாயகிகளின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சசிகுமார்..!

Published by
Dinasuvadu desk

அசுரவதம் படத்தில் நடிகர் சசிகுமாருடன் சில நடிகைகள் நடிக்க மறுத்ததாகவும் அவர்கள் யார் என்றும் அவர் கூறியுள்ளார்.

‘‘அசுரவதம் படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் அதிகம் இருக்கும். அசுரனை அழிக்கும் கதை. இதில் காதல் காட்சிகள் இல்லை. கதாநாயகி எனது மனைவியாக நடிக்க வேண்டும். இதற்காக சில கதாநாயகிகளை அணுகிய போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டனர். ஆனால் நந்திதா கதையை கேட்டு நடிக்க சம்மதித்தார். படத்தில் அறிமுக காட்சியில் அவர் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

கொடைக்கானலில் கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடத்தினோம். இந்த படத்தை நான்தான் தயாரிப்பதாக இருந்தது. லலித் ஆசைப்பட்டதால் அவர் தயாரிக்க முடிவானது. உங்கள் மீது நம்பிக்கை உள்ளது என்று சொல்லி பட வேலைகளில் அவர் தலையிடவே இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தை பார்த்து சிறந்த படமாக வந்துள்ளது என்று பாராட்டியபோது மகிழ்ச்சியாக இருந்தது.

வில்லன் கதாபாத்திரம் படத்தில் வலுவாக இருக்கும். இது நல்லவன் கெட்டவன் பற்றிய படம். இந்த காலத்துக்கு தேவையான ஒரு சமூக கருத்தும் படத்தில் இருக்கும். எனக்கு அதிகமாக கிராமத்து கதையம்சம் உள்ள படங்களே வருகின்றன. ஒரே மாதிரி படங்களில் நடிப்பதாக இமேஜ் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

ஏற்கனவே நான் நடித்த படங்களில் இருந்து அசுரவதம் வேறுபட்டு இருக்கும். கிராமத்து படங்களில் நடிப்பதற்காக எனக்கு வருத்தம் இல்லை. அதில் வித்தியாசமான கதைகள் நிறைய உள்ளன. தற்போது 4 படங்கள் கைவசம் உள்ளன. அவற்றை முடித்து விட்டு மீண்டும் படங்கள் டைரக்டு செய்வேன்’’.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

13 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

13 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

13 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

13 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

14 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

14 hours ago