சென்னை

விசாரணை கைதி மரணம் – 13 இடங்களில் காயம் என உடற்கூராய்வில் தகவல்..!

உயிரிழந்த விக்னேஷின் தலை, கண் புருவம், தாடை உள்ளிட்ட உடலின் 13 இடங்களில் காயம் உள்ளது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல். சென்னை புரசைவாக்கம்,கெல்லீஸ் சிக்னல் அருகே கடந்த வாரம் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,ஆட்டோவில் சென்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரிடம் கஞ்சா மற்றும் கத்தி இருந்ததாக கூறி காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து காவல்துறை விசாரணையில் விக்னேஷ் என்பவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த  நிலையில், […]

#Death 3 Min Read
Default Image

விசாரணைக்கு வரும் நபர்களை துன்புறுத்த கூடாது – உயர் நீதிமன்றம்

காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று விஜயலட்சுமி என்பாரின் வழக்கில் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. காவல் நிலையம் துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் வந்தால் நீதிமன்றம் கண்மூடி இருக்காது என்றும் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

#Chennai 2 Min Read
Default Image

#உஷார் மக்களே! விசாரிக்காமல் யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம் – ஆணையர்

வெளிநாட்டில் வேலைக்காக செல்வோர் பணி விசா பெற்று செல்லவும், சுற்றுலா விசா பயன்படுத்த வேண்டாம் என தாம்பரம் ஆணையர் ரவி அறிவுறுத்தியுள்ளார். வீட்டு வேலைக்கு சென்று குவைத்தில் சிக்கி தவித்த மஞ்சுளா என்ற பெண்மணி 5 நாட்களில் மீட்கப்பட்டார் என்றும் பெண்ணை விரைவாக மீட்ட பல்லாவரம் நுண்ணறிவு பிரிவு போலீசார், உதவி ஆணையருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆணையர், விசாரிக்காமல் வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும் பணி விசா எடுத்து முறைப்படி செல்ல […]

#Chennai 2 Min Read
Default Image

மே 5ம் தேதி உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை – ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு!

மே 5ம் தேதி சென்னையில் உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை என சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு. இதுதொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் 2022ம் நிதி ஆண்டின் முதல் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் கட்டிடத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எரிவாயு, பெட்ரோலிய பொருள் விலையேற்றத்தால் உணவகங்களின் பாதிப்புகள், மூலதனப் பொருட்களின் விலையேற்றம், குறிப்பாக சமையல் எண்ணெய், பருப்பு இவற்றின் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றின் […]

#Holiday 4 Min Read
Default Image

“சின்னக் கலைவாணர் விவேக் சாலை” – பெயர் பலகையை திறந்து வைத்த அமைச்சர்!

சின்னக் கலைவாணர் விவேக் சாலை என்ற பெயர் பலகையை திறந்து வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர்.  பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ல் மாரடைப்பால் காலமானார். கோவில்பட்டியில் பிறந்த விவேக், சென்னை, தலைமை செயலகத்தில் ஊழியராக பணியாற்றியவர். பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படம் மூல தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துணை நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தது மட்டுமின்றி, மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் சினிமா துறையில் மட்டுமல்லாது, […]

#Chennai 4 Min Read
Default Image

ஒரே நாளில் 10 நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்திடும் வீடியோ..! – சென்னை ஸ்டான்லி மருத்துவமனை விளக்கம்

வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஒரே நாளில் 10 நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்திடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரிப்பதற்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் பாலாஜி உத்தரவிட்டு இருந்தது. இந்த  நிலையில், இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிடி நெக்ஸ்ட் பேப்பர் ஆகியவற்றில் […]

stanly hospital 6 Min Read
Default Image

#TodayPrice:இன்றைய பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமா?..!

சென்னை:இன்று 25-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,ஏப்ரல் 6 ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்களால் கடைசியாக பெட்ரோல்,டீசல்  விலை உயர்த்தப்பட்டது,மேலும் ஒரு பதினைந்து நாட்களில் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை அதிகரித்தது. இந்நிலையில்,சென்னையில் இன்று 25-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் […]

PetrolDieselPriceToday 3 Min Read
Default Image

#BREAKING: மசாஜ் சென்டரில் சோதனை – உள்ளூர் போலீசுக்கு அதிகாரம்.. ஐகோர்ட் தீர்ப்பு!

மசாஜ் நிலையங்களில் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவு. சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் மசாஜ் நிலையம் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து, […]

#Chennai 4 Min Read
Default Image

#BREAKING: சென்னை ஐஐடியில் 200-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு!

சென்னை ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 196ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களாகவே படிப்பிடிப்பாக மாணவர்கள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் கூறுகையில், இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. ஆனாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். […]

#COVID19 3 Min Read
Default Image

#Breaking:பரபரப்பு…வீட்டின் மேற்கூரையை துளைத்த துப்பாக்கி குண்டு!

சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சியின்போது சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு அருகில் உள்ள வீட்டில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே ஆவடியில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கான பயிற்சி மையம் உள்ளது.நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.இந்த நிலையில்,பயிற்சி தளத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டிருந்த போது,வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட குண்டு அருகில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரையை நள்ளிரவு […]

#CMMKStalin 4 Min Read
Default Image

#Breaking:ஸ்லைடிங் நம்பர் பிளேட்;ஒரு வருடம் சிறை – போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை!

சென்னையில் உள்ள சாலைகளில் பைக் சாகசம் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில்,சென்னையில் காவல் துறையிடமிருந்து தப்பிக்க நம்பர் பிளேட்டை மறைத்து பைக் ஓட்டி வந்த 100 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும்,அவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்ற அண்ணா சாலை மற்றும் ஆலந்தூர் பகுதியில் உள்ள ஸ்டிக்கர் கடை உரிமையாளர்கள் இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் ஏமாற்றுதல்,மற்றும் மோட்டார் வாகன […]

Arrested 3 Min Read
Default Image

சென்னை ஐஐடி தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..! தொற்று எண்ணிக்கை 145-ஆக உயர்வு..!

சென்னை ஐஐடி-ல் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை 145-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை ஐஐடி-யில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், […]

#Corona 2 Min Read
Default Image

#BREAKING: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையில் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதிக புகை […]

#Chennai 3 Min Read
Default Image

#Breaking:சென்னை ரயில் விபத்துக்கான காரணம் – வெளியான முக்கிய தகவல்!!

சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.அப்போது ரயிலில் இருந்து ஓட்டுநர் வெளியே குதித்தததால் அவருக்கு காயம் ஏற்பட்டது.எனினும்,ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் ஏற்படவில்லை. இதனையடுத்து,இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து,ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதனிடையே,9 மணி நேரத்துக்கும் மேலான கடும் முயற்சிக்கு பிறகு விபத்துக்குள்ளான […]

ChennaiTrainAccident 5 Min Read
Default Image

#Breaking:சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி!

சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,சென்னை ஐஐடி வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள்,கொரோனா பரிசோதனைகள் மற்றும் மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.அதன்பின்னர்,சென்னை ஐஐடியில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக […]

ChennaiIIT 3 Min Read
Default Image

#BREAKING : ரயில் விபத்து – அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!

சென்னை, கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியானது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகமாக சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் ஓட்டுநர் மட்டும் […]

#TrainAccident 3 Min Read
Default Image

ரயில் விபத்து – தெற்கு ரயில்வே விளக்கம்..!

மின்சாரரயில் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகமாக சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் […]

#Accident 3 Min Read
Default Image

#BREAKING : பரபரப்பு – நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்…!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. வேகமாக சென்ற ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிரேக் சரியாக இயங்காததால், கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி ரயில் விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ரயிலில் யாரும் இல்லை எனவும், விபத்தில் ரயில் ஓட்டுநர் […]

#Accident 2 Min Read
Default Image

17-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை..!

சென்னையில் 17-வது நாளாக விலையில் எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் டீசல் விலை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில், இன்று 16-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனையாகிறது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை […]

#Petrol 2 Min Read
Default Image

மெட்ரோ ரயில் பயணம்.. ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசு கூப்பன் – 30 பயணிகளுக்கு பரிசு!

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குழுக்கள் முறையில் தேர்வான 30 பயணிகளுக்கு பரிசு. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கபடும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் […]

30Winners 5 Min Read
Default Image