ஈரான் : ஈரான் – இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர்கள் சிலர் காயமடைந்ததை ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் உறுதிப்படுத்தியது. தெஹ்ரானின் கேஷாவர்ஸ் தெருவில் உள்ள மருத்துவ மாணவர்களின் விடுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆம், டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகம், இஸ்ரேல் தாக்குதலில் 5 இந்திய […]
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக அறிக்கையின்படி, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இணைவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாகதகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 6வது நாள் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், 2024ஆம் ஆண்டில் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் 64 வீதம் பேர் போருக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக […]
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை தாக்கும் என அஞ்சப்படுவதால், போர் இன்னும் தீவிரமடையும் நிலையில், மக்கள் தான் பாதிக்கப்பட உள்ளனர். ஈரானில் தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்கும் நிலையில் கமேனி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ‘ஈரான் உடனடியாக சரணடைய வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவுறுத்திய நிலையில் ஈரானிய தலைவர் ஆயத்துல்லா காமேனி பதிலடி கொடுத்துள்ளார். நேற்றைய தினம், […]
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் முக்கியமான தனியார் விண்வெளி பயணமாகும். இந்த திட்டம், பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் ஏற்கனவே ஜூன் 19, 2025 அன்று தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது, ஜூன் 22, 2025 (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி மதியம் 1:12 மணிக்கு (1:12 PM IST) ஸ்பேஸ்எக்ஸ்-இன் பால்கன் 9 ராக்கெட்டில் […]
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்படியான சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் மிகப் பெரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்றுவிட்டால் , இந்த மோதல் முழுவதும் முடிந்துவிடும் என்று அவர் கூறியிருந்தார். அவரை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனேயை குறிவைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்து, […]
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று ஜி7 நாடுகளின் தலைவர்கள் (அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான்) ஒருமித்த கருத்தை வெளியிட்டனர். இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உள்ளதாகவும், ஈரான் மத்திய கிழக்கில் பிராந்திய அமைதியின்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.இந்த மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக […]
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகம் இருக்கும் இடமும் ஒன்று என வீடியோவை வெளியிட்டு ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொலை செய்ய போவதாக மிரட்டினார். கமேனி கொல்லப்பட்ட பின்னரே […]
தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளதாக தெரிகிறது. தற்பொழுது, தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானி கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. அவர் 4 நாட்களுக்கு முன்புதான் இந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆம்.., இஸ்ரேல் ராணுவம், ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷித் கொல்லப்பட்ட நிலையில், […]
இஸ்ரேல் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு செய்தி தொலைக்காட்சி சேனலான ”Abruptly” மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. செய்தி வாசிப்பின்போது தாக்குதல் நடந்ததால், வாசிப்பாளர் உடனடியாக அங்கிருந்து ஓடினார். இந்த காட்சி தற்போது வைரலாகி கொண்டு இருக்கிறது. எனவே, இந்த பதற்றமான சண்டையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பரபரப்பான […]
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைவரும் உடனடியாக டெஹ்ரானை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே, இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதன் காரணமாக, ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவும் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுங்கள் என அறிவித்துள்ளது. அதிபர் டிரம்ப், ஈரான் அணுசக்தி […]
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு செய்தி தொலைக்காட்சி சேனலான ”Abruptly” மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. செய்தி வாசிப்பின்போது தாக்குதல் நடந்ததால், வாசிப்பாளர் உடனடியாக அங்கிருந்து ஓடினார். இந்த காட்சி தற்போது வைரலாகிறது. இஸ்ரேல் மீது எதிர்பாராத தாக்குதல் இன்று நடத்தப்படும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மீதான நேரடி விமர்சனத்தை ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் […]
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தலைநகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. டெஹ்ரானில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்துள்ளது. […]
இஸ்ரேல் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஜூன் 13 முதல் இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி மையங்கள், இராணுவ இலக்குகள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அமெரிக்காவின் பங்கு குறித்து, டிரம்ப் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், இஸ்ரேலுக்கு ஆயுத ஆதரவு வழங்குவதாக ஈரான் […]
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், இதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 ஜூன் 13 முதல் இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி மையங்கள், இராணுவ இலக்குகள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களின் ஒரு […]
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் பல ஈரானிய இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் பல அணு ஆயுத இலக்குகளும் அடங்கும். இந்த விமானத் தாக்குதலில் முக்கியமான 20 ஈரானிய தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, பிற்பகலில் இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி கொடுத்தது. ஈரான் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியது. இஸ்ரேலிய […]
இஸ்ரேல் : இஸ்ரேல் – ஈரான் இடையே பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 329 பேர் காயமடைந்துள்ளனர். நள்ளிரவுக்கு பின் வான் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியது. ஈரானின் அணு ஆயத திட்டங்களுக்கு தொடர்புடைய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதில் ஈரானின் IRGC […]
இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இன்று “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இதில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள முக்கிய இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டன. இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 34 பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் தரப்பு […]
அமெரிக்கா : ரியாக்சன் கொடுப்பதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான யூடுயூபர்களில் ஒருவர் ‘ஐ ஷோ ஸ்பீடு’. இவர் ரன்னிங் ரேஸிலும் சிறப்பாக ஓடக்கூடிய ஒருவர் என்பது அவரை பின்தொடர்ப்போருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இவரை யூடியூப்பில் மட்டும் 40 மில்லியனிற்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இவரை போலவே காலையில் சீக்கிரம் எழுந்து ஐஸ் வாட்டரில் முகம் கழுவும் வீடியோ, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் Ashton Hall (ஆஷ்டன் ஹால்). இவருக்கும் யூடியூப்பில் 3 மில்லியனிற்கும் […]
இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளான துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவை இலக்கு வைக்கப்பட்டன. இஸ்ரேல் இந்தத் தாக்குதலை ஈரானின் அணுசக்தி ஆயுதத் திட்டங்களைத் தடுப்பதற்காகவும், பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் குறைப்பதற்காகவும் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் ஈரானின் பாதுகாப்பு அமைப்புக்கு பெரும் […]
வாஷிங்டன் : ஜூன் 13-ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் அதிகாலை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணியளவில் (2330 GMT) தொடங்கிய இந்தத் தாக்குதல்களில், ராணுவத் தளங்கள், அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் குறிவைக்கப்பட்டன. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், ஈரானுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய […]