டெல்லி : வாட்ஸ் அப் பயன்பாட்டில் உள்ள “சேனல்கள்” (Channels) என்ற அம்சத்தில் மெட்டா நிறுவனம் புதிதாக ஒரு சந்தா முறையை (Subscription) கொண்டு வர திட்டமிடுகிறது. இதன்படி, பயனர்கள் தங்களுக்கு பிடித்த சேனல்களில் இருந்து சிறப்பு தகவல்கள், புதிய அறிவிப்புகள் அல்லது பிரத்யேகமான விஷயங்களைப் பார்க்க வேண்டுமென்றால், ஒரு சிறிய மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மாற்றம் வாட்ஸ் அப்பின் “அப்டேட்ஸ்” (Updates) என்ற பகுதியில் வரவிருக்கிறது. இந்தப் பகுதியில், பயனர்கள் தங்களுக்கு பிடித்த […]
டெல்லி : இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் UPI (Unified Payments Interface) மூலம் பணம் அனுப்புவது இனி மிக வேகமாக இருக்கப் போகிறது. ஏனென்றால், National Payments Corporation of India (NPCI), கடந்த ஏப்ரல் 26 – ஆம் தேதி அன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது என்னவென்றால், போன்பே, கூகிள் பே, பேடிஎம் போன்ற பிரபல UPI ஆப்களில் பணப் பரிமாற்றம் இன்னும் வேகமாகவும், எளிதாக மற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக […]
மேற்கு வங்காளம் : OpenAI இன் ChatGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது ChatGPT இன் புதிய மாடல், நாட்டின் கடினமான தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றதன் மூலம் விவாதத்தைத் தூண்டியுள்ளது. உலகளவில் கடினமாக கருதப்படும் JEE ADVANCED தேர்வெழுதிய CHAT GPT 03. 360-க்கு 327 மதிப்பெண்கள் பெற்று, தேர்வில் அகில இந்திய அளவில் 4வது இடத்தைப் பிடித்தது. ஆம், இந்த மதிப்பெண், JEE Advanced தேர்வில் All India Rank […]
அமெரிக்கா : கூகிள் தேடலில் ஒரு சிறந்த அம்சத்தை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும், கூகிள் இப்போது தேடலில் AI பயன்முறையைச் சேர்த்துள்ளது. கூகிள் ‘AI Mode’ என்பது Google-இன் Gemini மாதிரிகளால் (Gemini models) இயக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தேடல் அனுபவமாகும். இது தேடல் முடிவுகளைத் தாண்டி, பயனர்களின் கேள்விகளுக்கு உரையாடல் வடிவில் பதிலளிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற பொருட்களை எளிதாகக் கண்டறியலாம், ஒப்பீடு […]
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ மட்டுமல்லாமல் அதற்கேற்ற ஆடியோ, கதாபாத்திரங்களின் உரையாடல், இசை, சுற்றுப்புற சத்தங்கள், SFX உள்ளிட்டவற்றை தெளிவாக தயாரித்துக் கொடுக்கிறது. கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ‘Veo 3’ Al தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Veo 3 அறிமுகப்படுத்தப்பட்டவுடன், சமூக ஊடக பயனர்கள் அதைப் பயன்படுத்தி […]
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அம்சம் உங்கள் பேச்சை உடனே வேறு மொழியில் மாற்றி, உங்கள் குரலில் ஒலிக்கச் செய்யும். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் நீங்கள் தமிழில் “வணக்கம்” என்று பேசினால், மறுபுறம் உள்ளவருக்கு அதை ஆங்கிலத்தில் “Hello” என்று ஒழிக்க செய்யும். அது மட்டுமின்றி உங்கள் குரலின் உணர்ச்சியும், இயல்பான தன்மையும் கொஞ்சம் கூட […]
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI தனி ஆப் வெளியிடப்பட்டதாக அறிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ” புதிய Meta AI ஆப் இன்று வெளியாகிறது! Meta AI ஆனது எங்கள் புதிய Llama 4 மொழி மாதிரியால் இயக்கப்படுகிறது. இது OpenAI, Google, Deepseek, மற்றும் Anthropic ஆகியவற்றின் சமீபத்திய AI மாடல்களுக்கு இணையாக […]
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI – Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை பயன்படுத்தி வரும் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல் ஒன்று பரவி வந்தது. அது என்னவென்றால், யுபிஐ பரிவர்த்தனைகள் மீது ரூ.2,000-ஐ தாண்டும் தொகைக்கு 5 % ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) விதிக்கப்படவிருந்ததாகவும் தீயான தகவல் பரவியது. இந்த தகவல் உண்மையா இல்லையா என தெரியாமல் பலரும் சமூக வலைத்தளங்களில் […]
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு மெசேஜ் அனுப்பும் போது அந்த மெசேஜ் போகவில்லை எனவும் சிலர் புகைப்படங்கள் அனுப்பும் போது இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் ஸ்டேட்டஸ் (Status) பதிவிட முடியவில்லை என்றும் புகார்களை தெரிவித்துள்ளனர். இந்த சிக்கல் இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் பல பயனர்களை பாதித்துள்ளது. இந்த சிக்கல் மாலை 5 மணி முதல் (IST) தொடங்கியதாகவும், உலகளவில் பல நாடுகளில் […]
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி யோசித்து வருகிறது. இதற்கு காரணம், நாட்டின் மிகப்பெரிய சைபர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய விசாரணையில், சில சிம் கார்டுகளில் உள்ள சிப்செட்டுகள் (chips) சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. இந்த விசாரணையை தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் (NCSC) மற்றும் உள்துறை அமைச்சகம் (MHA) சேர்ந்து நடத்தின. இதனால், தேசிய பாதுகாப்பு (national security) பற்றிய […]
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு ஐபிஎல் முடியும் வரை தொடர்ச்சியாகவே ஐபிஎல் போட்டிகளை பார்த்து கண்டுகளித்து வருவார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே பலரும் ஜியோ ஜினிமாவில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்போது அந்த வசதி இல்லை என்பது தான் பெரிய சோகமான விஷயமாக இருந்து வருகிறது. ஏனென்றால் ஜியோ சினிமாவும், ஹாட்ஸ்டாரும் இணைந்திருக்கும் காரணத்தால் இப்போது […]
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே ஸ்டோர். இந்த கூகுள் பிளே ஸ்டோரில் பாதுகாப்பான ஆப்கள் தான் அதிகம் இருக்கும். இருந்தும் சில சமயம் பாதுகாப்பு குறைபாடு உள்ள, சில விஷமதனமான வேலைகளை செய்யும் ஆப்கள் இருக்கும். அதனை அவ்வப்போது கூகுள் கண்டறிந்து அதனை பிளே ஸ்டோரில் இருந்து வெளியேற்றிவிடும். அப்படியான செயல்முறை தற்போது நிகழ்ந்துள்ளது. அதாவது, பாதுகாப்பு குறைபாடுகள், பயனர்களுக்கு விரும்பத்தகாத […]
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய இணையசேவை உலகில் நெம்பர் 1 இடத்தை பிடிக்க ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் VI நிறுவனமும் இருந்தாலும், இவர்கள் அளவுக்கு அவர்களால் ஈடு கொடுக்கமுடியவில்லை என்றே கூற வேண்டும். அதிவேக இன்டெர்நெட் சேவை வழங்கும் பொருட்டு நேற்று ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் […]
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளது. அதே சமயம், எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தன்னுடைய ஸ்டார் லிங்க் (Starlink) திட்டத்தை அனைத்து நாடுகளிலும் செயல்படுத்த முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். […]
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து பல்வேறு முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் இயங்கு முறையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இதனால் எக்ஸ் தளத்தை பயன்படுத்தும் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். எந்த வகை சைபர் தாக்குதல்? நேற்று எக்ஸ் தளத்திற்கு ஏற்பட்ட சைபர் தாக்குதலானது DDoS எனும் வகையை சார்ந்தது என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த DDoS (Distributed Denial-of-Service) சைபர் […]
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது. இந்த முடக்கம் சில மணிநேரங்களிலேயே சரிசெய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் எக்ஸ் தள பாதிப்பை உணர்ந்தனர். இந்த முடக்கம் காரணமாக போஸ்ட் (ட்வீட்) செய்ய முடியாது, தகவல்களைப் பெற முடியாமல் தவித்தனர். ஒரு கட்டத்தில் கடுப்பான பயனர்கள் எக்ஸ் தள பக்கத்திலேயே #XDown மாற்றம் #TwitterDown எனும் ஹேஸ்டேக்களை ட்ரெண்ட் செய்து சீக்கிரம் சரி […]
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இந்த முடக்கம் சில மணிநேரங்களிலேயே சரிசெய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் எக்ஸ் தள பாதிப்பை உணர்ந்தனர் என பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக எக்ஸ் தள பக்கத்திலேயே #XDown மாற்றம் #TwitterDown எனும் ஹேஸ்டேக்களை எக்ஸ் தளவாசிகள் ட்ரெண்ட் செய்து தாங்கள் சந்தித்த இடையூறுகளை பதிவிட்டு வருகின்றனர். சுமார் 90 நிமிடங்கள் […]
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும் இந்த நிறுவனம் அதிகமாக கேமிங் விளையாட வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன அம்சங்களை கொண்டு வரவேண்டுமோ அதெல்லாம் தங்களுடைய அடுத்தடுத்த மாடல்களில் கொண்டு வருகிறது. அந்த வகையில் கேமிங் பிரியர்களை இன்னுமே கவரும் வகையில் Neo வகையில் 10-வது மாடலை (iQoo Neo 10R) களமிறக்க திட்டமிட்டுள்ளது. இந்த போனில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது எப்போது இந்தியாவில் […]
நியூயார்க் : மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதியதாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஐ அறிமுகம் செய்தது. குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் கணினியை விட அதீத திறன் கொண்ட , நம்பத்தகாத பணிகளை செய்யும்படி உருவாக்கப்பட்ட கணினி வகைகள் ஆகும். அதில் பயன்படுத்தப்படும் வகையில் அதற்கென பிரத்யேகமாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஆன மஜோரானா 1-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த மஜோரானா 1 குவாண்டம் சிப்பானது டோபோலாஜிக்கல் கோர் கட்டமைப்பால் இயக்கப்படும் உலகின் முதல் குவாண்டம் சிப் […]
டெல்லி : எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ட்வீட்டரை (எக்ஸ்) வாங்கியதில் இருந்து பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக, தற்போது அதிகமாக வளர்ச்சி அடைந்து வரும் AI தொழில் நுட்பத்தையும் எக்ஸ் வலைத்தளத்திற்குள் க்ரோக் என்கிற பெயரில் கொண்டு வந்தார். முதற்கட்டமாக க்ரோக் 1 என்கிற முதல் மாடலை 2023 நவம்பர் மாதம் கொன்டு வந்தார். அந்த மாடல் செயல்பாட்டில் இருந்த போது மற்ற AI தொழில் நுட்பங்கள் கொடுக்கும் தகவல், […]