சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வறுமைகோட்டியிற்கு கீழ் உள்ளவர்கள் உட்பட பலருக்கு 2 லட்சத்து 11 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இல்லாத போலியான நபர்கள் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் […]
தமிழகத்திற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் கடந்த 19-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். அப்போது, தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்தவும், சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கவும், மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் […]
தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக எம். அப்துல்ரகுமான் தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முதன்மை துணைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான எம். அப்துல்ரகுமான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 2020-21ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இன்று முதல் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அந்தவகையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி, www.dge.tn.gov.in & www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் தங்கள்து பதிவெண் மற்றும் பிறந்த […]
நடிகர் விஜய் மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு பட்டியலிட படித்துறைக்கு உத்தரவு. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சொகுசு கார் வரிவிலக்கு தொடர்பானது மேல்முறையீட்டு வழக்கில் தனிநீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல் விசாரணை பட்டியலிட வேண்டும் என்று நடிகர் விஜய் […]
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் 438-ஆம் ஆண்டு திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலய திருவிழாவானது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவதுண்டு. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் வருவதுண்டு. இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, இந்த திருவிழா பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து, தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தூத்துக்குடி பனிமயமாதா […]
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், ஆளுநர் மாளிகை முன்பதாக முற்றுகை போராட்டம். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. பெகாஸஸ் பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் […]
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகைக்காக மதுரையில் சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட மாநகராட்சி துணை ஆணையர் பணியில் இருந்து விடுவிப்பு. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதுரையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு வருவதையொட்டி சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், மதுரை மாநகராட்சி மண்டலம்-4 சத்ய சாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் 22.07.2021 முதல் 26.07.2021 வரை நேரில் கலந்துகொள்ள உள்ளார். எனவே அன்னாரின் […]
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் வந்தன. பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டு அவரை ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் கட்சியிலிருந்து நீக்கினர். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டு, இரட்டை தலைமை […]
பிளஸ் 2 மாணவ, மாணவிகள் இன்று முதல் மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2020-21ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கடந்த 19ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டியிருந்தார். மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். உயர்கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக, இந்தாண்டு […]
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக-வின் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ,இக்காலகட்டத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் ,போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு,ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் அவர் வீடு உட்பட 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் தொகுதியில் […]
நடிகர் விஜய் செய்த மேல்முறையீட்டு மனு நாளை நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா முன்பு விசாரணைக்கு வருகிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,891 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,891 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,41,168 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 138 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,809 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 2,423 பேர் […]
நடிகர் விஜய் செய்த மேல்முறையீட்டு மனு நாளை நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா முன்பு விசாரணைக்கு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண […]
ஈரோடு புறநகர் மாவட்டத்துக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். கழக நிர்வாக வசதியைக் கருத்தில்கொண்டு, ‘ஈரோடு புறநகர் மாவட்டம்’ என செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்பு, இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக ‘ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்’, ‘ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்’ என இரண்டு மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் […]
“அதிமுகவில் இருந்து யாரையும் நீக்க ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை” என சசிகலா ஆதரவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். இதனால் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் அதிமுக தொண்டர்களை கட்சி தலைமையில் இருந்து நீக்கி வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து சசிகலா அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடம் தொலைப்பேசியில் பேசி வருகிறார். இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டுவது […]
ராமேஸ்வரத்தில் இரட்டை மடி வலைகளை பயன்படுத்திய 13 விசைப்படகுகளுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று மீன் பிடித்து வருகின்றனர். இதில் சிலர் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இரட்டை மடி வலைகளால் மீன் வளம் குறையும் அபாயம் இருப்பதால் இதனை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் அனைத்து விசைப்படகு […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி. சேகர், திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது. எந்த விமர்சனத்தையும் 100 நாட்கள் வரை வைக்க வேண்டாம் என்று நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு […]