சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒருமையில் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் தனது இயல்பை மீறியது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆதவ் அர்ஜூனா […]
சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் விஜய், அஞ்சலை அம்மாளை கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அறிவித்தார். இந்த நிலையில், அவரது பிறந்தநாளான இன்று (ஜூன் 1) தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலை அம்மாளின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். […]
மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். பின்னர், இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தற்போது கூட்டத்தில் பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”நான் மமதையில்பேசுகிறவன் அல்ல. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று ஆணவக் குரலில் சொல்பவன் அல்ல. எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. என்னைப் பொறுத்தவரைக்கும், […]
சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள் வசித்து வரும் அந்த குடியிருப்புகளை இடித்து மக்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒக்கலா, கௌதம் புரி, இந்திரபுரி, ஜல் விஹார், ஜங்புரா உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இடத்தை அரசு அகற்றுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்னர். தற்பொழுது, கால்வாயை ஒட்டியுள்ள குடிசை பகுதிகளை அகற்றும் பணியில் ஒரு பகுதியாக […]
சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒருமையில் குறிப்பிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் தனது இயல்பை மீறியது என்பதை தான் ஒப்புக்கொள்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் அவரது பதிவில், ”எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் […]
சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின், தொண்டர்கள் புடைசூழ மேடைக்கு வருகை தந்தார். 2026 பொதுத் தேர்தலுக்கு எழுச்சியூட்டும் பொதுக்குழுவாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் என பலரும் பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். குறிப்பாக, இந்த பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை.., முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை […]
சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை செந்தித்து பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி ,”அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் போட்டியிடுவார்கள். தேமுதிக-வுக்கு 2026ல் […]
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின் மூத்த தலைவர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு தனபால் போட்டியிடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரண்டு இடங்களிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. தேமுதிகவிற்கு சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், சீட் கொடுக்கப்படவில்லை. அதே நேரம், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்று கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தல் 2025- […]
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் திமுக தெற்கில் இருந்து தொடங்கும் வகையில் நாளை மதுரை மாவட்டத்தில் பிரமாண்டமாக பொதுக்குழு ஒன்றை நடத்துகிறது. எனவே, நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு முன்பு இன்று மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார் எனவும், மதுரை பெருங்குடி […]
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ஒரு பக்கம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வருகிறார். மற்றொரு பக்கம் கட்சியின் தலைவர் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது நானே? எனவே […]
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 31-05-2025 முதல் 06-06-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல சென்னையை பொறுத்தவரையில் இன்று (31-05-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ஒரு பக்கம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வருகிறார். மற்றொரு பக்கம் கட்சியின் தலைவர் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது நானே? எனவே நான் […]
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கிய ராமதாஸ், கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வருகிறார். அதே சமயம் சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய அன்புமணி, நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது நானே? என கூறி வருகிறார். இந்த நிலையில், சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் உடனான 2ம் நாள் ஆலோசனை […]
மதுரை : நாளை (ஜூன் 1) மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று மதுரை வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை சுமார் 17 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பந்தல்குடி சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் நிலையில், சாலையில் உள்ள சாக்கடை கழிவுகள் கலக்கும் […]
சென்னை :பாமக கட்சியில் தற்போது அன்புமணி தனியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவதும், தானே தலைவர் என அறிவிப்பதும், பதிலுக்கு ராமதாஸ் பொருளாளர் உள்ளிட்டோரை நீக்குவதும் ஆலோசனை நடத்துவதும் பாமக பிளவை நோக்கி செல்வதை காட்டுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாமக தலைவர் அன்புமணி மீது நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இரண்டாம் நாளாக கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ். இது ஒரு […]
சென்னை : நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,147, மஹாராஷ்டிராவில் 424, டெல்லியில் 294, குஜராத்தில் 223 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதாகக் […]
சென்னை : தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் (மே 31, 2025) சுமார் 8 ஆயிரத்து 144 பேர் அரசுப் பணிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ளனர். குரூப் ஏ பணியிடங்களில் 424 பேரும், குரூப் பி பணியிடங்களில் 4,399 பேரும், குரூப் சி-ல் 2,185 பேரும், குரூப் டி-ல் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள். இதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மற்றும் பிற துறை ஊழியர்கள் அடங்குவர். குறிப்பாக, கல்வி, சுகாதாரம், காவல், மற்றும் நிர்வாகத் துறைகளில் […]
சென்னை : மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, நாடு முழுவதும் 1,828 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் மட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர். மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், டெல்லி மாநிலங்களில் புதுவகை கொரோனா பரவி வருகிறது. குஜராத்தில் 8 மாத குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் […]
சென்னை : தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 2 பேர் யார்? என்ற கேள்வி நிலவி வருகிறது. எம்பி சீட் கேட்டு நெருக்கடியால், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், மாநிலங்களவை சீட் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நேற்றைய தினம் […]
மதுரை : ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கடந்த மே3 ம் தேதி நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், நாளை 4 ஆண்டுகால திமுக ஆட்சியின் திட்டங்கள் குறித்து 1,244 இடங்களில் கூட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளை மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இன்று மதுரை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மதுரை பெருங்குடி முதல் […]