சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் அப்பகுதி கிராமத்தில் உள்ள விவாசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது என ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதி கிராம மக்கள் 2 வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதில் இருவரும் காரசாரமாக தங்கள் கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்களை பார்த்து, ” நீட் தேர்வை யார் கொண்டு வந்தது? என எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார். நீட் கொண்டு வந்த பிறகு, தற்போது அதனை சரி செய்ய உங்களுக்கு ஒரு […]
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ், புனித வெள்ளி பிரார்த்தனையில் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால், அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானதாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல் தமிழ்நாடு அரசியல் […]
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், தற்போதைய கன்னியகுமாரி கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவருமான ராஜேஷ்குமார் உட்பட 6 பேர் மீது அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று […]
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”இந்தியாவில் முதன்மையான மருத்துவ கட்டமைப்பை பெற்றுள்ளது தமிழ்நாடு. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தால் 52 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்திற்கு ஐ.நா விருது கிடைத்துள்ளது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள 7,618 எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட […]
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,”நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதே திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான். நீட்டை ஒழிப்பதாக பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது” என்று கூறினார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் பொய் வாக்குறுதி கொடுக்கவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்றே சொன்னோம். நாங்கள் ஏமாற்றி […]
சென்னை : 3 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடியது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய கூடலூர் அதிமுக உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது தொகுதியில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், […]
சென்னை : அமைச்சர் கே.என். நேருவின் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி 10-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தை உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைப்போல, இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 53 பேர் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காலையில் இருந்தே தகவல்கள் பரவிக்கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் மாசடைந்த குடிநீரால் தான் ஏற்பட்டது எனவும் செய்திகள் வெளியான நிலையில் அமைச்சர் […]
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையடுத்து, 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, புனித வெள்ளியையொட்டி கடந்த 18ம் தேதி அரசு விடுமுறை என்பதால், சட்டப்பேரவை கூடவில்லை. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சட்டப்பேரவைக்கும் […]
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து பூத் கமிட்டி கருத்தரங்கில் த.வெ.க தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”கோவை குரும்பாளையம் SNS கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் […]
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் ” ஒரு சிலர் திமுகவை மட்டுமே நம்பி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டு விசிக தான். அதன் காரணமாக தான் இப்படி பேசிக்கொண்டு வருகிறார்கள்.எந்த எதிர்பார்ப்புமின்றி கூட்டணியில் தொடர்கிறோம் என்றால் துணிவு, தெளிவு வேண்டும் . தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும் எனவும் […]
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு அதிகாரம் உள்ளது என உதகையில் ஏப்ரல் 25, 26, 27, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் துணைவேந்தர்கள் மாநாடு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்த மாநாடு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில, மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் இந்த இரண்டு நாள் […]
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு ஆளும் திமுக அரசு பொறுப்பு எனவும் குற்றம் சாட்டி பேசியிருந்தார். தனது உரையாடல்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் எனவும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி பேசியிருந்தார். அவரை தொடர்ந்து தற்போது நதாக ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன்னுடைய செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” பாஜகவின் […]
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு அவர் தனது விலகல் முடிவை மாற்றியுள்ளார். அதன்பிறகு மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சற்று வேதனையுடன் மல்லை சத்யா பேசியிருந்தார். இதனையடுத்து, மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை துரை வைகோ […]
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர் வெளியீட்டு இருந்த அறிக்கையில் ” மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி அதில் சுகம் காணும் நபர் மத்தியில் என்னால் கட்சிப் பணி செய்ய முடியாது என்னால் இயக்கத்திற்கோ, தலைவருக்கோ எந்த சேதமும் வந்துவிடக்கூடாது . கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வந்த முயற்சிகளை கட்சியினர் தொடர […]
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 20-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 20-04-2025 மற்றும் […]
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர் வெளியீட்டு இருந்த அறிக்கையில் ” மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி அதில் சுகம் காணும் நபர் மத்தியில் என்னால் கட்சிப் பணி செய்ய முடியாது என்னால் இயக்கத்திற்கோ, தலைவருக்கோ எந்த சேதமும் வந்துவிடக்கூடாது . கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வந்த முயற்சிகளை கட்சியினர் தொடர […]
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும் எழுந்துகொண்டு இருக்கிறது. ஏற்கனவே, அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்திருந்தது. இருப்பினும், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்பதற்கான விவரம் வெளியாகவில்லை. இந்த சூழலில், பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் வெடித்திருந்த நிலையில், பாமக திமுகவுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தீ போல […]
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர் வைகோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரை வைகோ 2021 அக்டோபர் மாதம் மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்று, பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக உயர்ந்தவர். அவர் தனது விலகல் முடிவுக்கு காரணம் குறித்து அறிக்கையில், கட்சிக்கும் தலைமைக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் ஒரு நபரின் செயல்களை குறிப்பிட்டுள்ளார். மேலும், […]
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அண்மையில் நடந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் வைகோ ஈடுபட்டார். இந்நிலையில், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், ஆனாலும் அடிப்படை தொண்டனாக கட்சியில் இருப்பேன் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, கட்சியில் இருந்து துரை வைகோ விலகியது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அவருடைய தந்தையும், கட்சியின் நிறுவனருமான […]