இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஐதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கான 11வது சீசன் வரும் 7ல் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஐதரபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இருந்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3வது டெஸ்டில், சக வீரரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்கு துணை போன இவருக்கு, ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஐதராபாத் அணியில் இருந்து […]
மகேந்திர சிங்க் தோனி ‘கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ‘பினிஷிங்’ செய்துள்ளார். தினேஷ் கார்த்தியை இவருடன் ஒப்பிட வேண்டாம்,” என, ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்தார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி. இரு உலக கோப்பை (2007, 2011) வென்று தந்தவர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த ‘பினிஷர்’ என்ற பெயர் பெற்றவர். இதனிடையே, சமீபத்தில் நடந்த முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடர் பைனலில் (எதிர்-வங்கதேசம்), இந்தியாவின் தினேஷ் கார்த்திக், கடைசி பந்தில் […]
பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது.சென்னை வந்துள்ள தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் தற்போது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது.அதனால் சென்னைக்கு விசில் போட, ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் ஆர்வமாகி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டோஷூட்களில் நடித்து வருகின்றனர். […]
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியைச், இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது சமியின் மனைவி ஹசின் ஜகான் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் முகமது சமியின் மீது அவர் மனைவி ஹசின் ஜகான் பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். சமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் மேற்குவங்கக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஹசின் ஜகான் இன்று கொல்கத்தாவில் முதலமைச்சர் […]
மகளிர் கிரிக்கெட்டில் கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20-யில் 56 பந்துகளில் சதம் எடுத்து மட்டும் அல்லாமல் டி20-யில் முதல் சதமெடுத்த இங்கிலாந்து வீராங்கனை என்று பெயரெடுத்த டேனி வியாட், தான் கோலி பரிசாகக் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன.இது குறித்து அவர் கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு கூறியபோது, “நான் இப்போது விராட் கோலியின் பேட்டை பயன்படுத்துகிறேன்” என்றார். 2014-ல் இங்கிலாந்து […]
11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் துவங்குகிறது.இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த வீரர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மொத்தம் 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவும் […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே நடந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகல்-இரவு ஆட்டமாக ஆக்லாந்து நகரில் கடந்த வியாழனன்று தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் […]
பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் பஞ்சமில்லாத இந்த திருவிழாவில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்குகிறது. அதனால் சென்னைக்கு விசில் போட, ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் ஆர்வமாகி வருகிறார்கள். அணிக்கு ’தல’ தோனி மீண்டும் கேப்டனாகி இருக்கிறார். ’சின்ன தல’ ரெய்னா, சுழல்கள் ஜடேஜா, ஹர்பஜன் சிங், கரண் சர்மா, ஆல் ரவுண்டர் […]
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பரதாரர்களில் ஒருவராக “இக்விடாஸ்’ நிதி நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் அதுதொடர்பாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்களான முரளி விஜய், டுவைன் பிராவோ பங்கேற்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் டுவைன் பிராவோ, “இந்த ஐபிஎல் போட்டிக்கான ஏலம் […]
‘பி’ க்ரேட் ஒப்பந்தத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை,கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. இதனால், ஐ.பி.எல் போட்டியில் ஷமி பங்கேற்க இருந்த சிக்கல் விலகியுள்ளது. முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், கடந்த சில நாட்களுக்கு முன் ஷமி மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் ஒன்றாக, பாகிஸ்தான் நபரிடம் இருந்து மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட பணம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஷமியின் ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்தது. மேலும், இது தொடர்பாக […]
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சென்னை அணிக்காக ஐபிஎல் விளையாடவுள்ளதை ஒட்டி தமிழில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள, நான் வந்துட்டேன்னு சொல்லு, தமிழின் அன்பு உடன் பிறப்பெல்லாம் எப்படி இருக்கீங்க மக்கா ? என தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங். அண்மைக்காலமாக அணியில் இடம் கிடைக்கமால் தவித்து வந்தார். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ஏலத்தில் எடுத்தது. இதனால் மிகுந்த […]
ராஜஸ்தான் நீதிமன்றம் அம்பேத்கருக்கு எதிராக ட்வீட் செய்த கிரிக்கெட் வீரர் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 26 அன்று, எந்த அம்பேத்கர், அரசியல் சாசனத்தை வகுத்தவரா? அல்லது இடஒதுக்கீடு என்கிற நோயைப் பரப்பியவரா என்று பிரபல கிரிக்கெட் வீரர் பாண்டியா கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.இந்த ட்வீட் தனது சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக மேக்வால் என்கிற வழக்கறிஞர், ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாண்டியா மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு எஸ்.சி/எஸ்.டி. […]
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) , இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை ஏதும் இல்லை என்று இன்று தெரிவித்துள்ளது. முகமது ஷமி மீது அவரின் மனைவி கூறிய ஊழல் குற்றச்சாட்டுகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பிசிசிஐ அமைப்பின் ஊழலுக்கு எதிரான அமைப்பு இந்த அனுமதியை அளித்தது. அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ சமீபத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்திலும் முகமது ஷமியின் பெயர் சேர்க்கப்படாமல் இருந்து வந்தது. இப்போது, […]
இன்று மும்பையில் ஆஸ்திரேலியா,இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றிருக்கும் பெண்கள் டி20 முத்தரப்பு தொடர் தொடங்கியது. துவக்க போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் சேர்த்தது. அதிகபட்சமாக துவக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 67 ரன் குவித்தார். இதன் பிறகு விளையாடிய ஆஸ்திரேலியா […]
சமியின் மனைவி புதிய புகார் ஒன்றை இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு பல பெண்களை அறிமுகம் செய்து வைத்ததே லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் என்பவர் தான் என தெரிவித்துள்ளார். முகமது சமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜஹான் அளித்த புகாரில் கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சூதாட்டப் புகார் ஒன்றையும் ஜஹான் கூறியதால் பிரச்சனை பூதாகரமானது. இந்த நிலையில் சூதாட்டத்திற்காக பணத்தைக் கொடுத்த லண்டனை சேர்ந்த தொழிலதிபர் முகமது […]
மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள முரளி விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது எப்போதுமே தனி சிறப்பு தான் என கூறியுள்ளார். சென்னை அடையாறில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த முரளி விஜய், டுவைன் பிராவோ பங்கேற்றனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் உரையாடினர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
58 ரன்களுக்கு இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்சில், நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் போல்ட் மற்றும் சௌதியின் பந்துகளில் இங்கிலாந்து அணி முற்றிலும் சிதறியது. போல்ட் 6 விக்கெட்கள் எடுக்க, சௌதி 4 விக்கெட்கள் வீழ்த்தினார். ஒரு சமயத்தில், 27 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது இங்கிலாந்து. ஆனால், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஒவர்டன், 33 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து 58 ரன்களை பதிவு […]
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஒரு கேப்டனுக்கான சரியான உதாரணம் விராத் கோலிதான் என்று கூறினார். ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் விராத் கோலியிடம் பார்த்தே வந்திருக்கிறேன். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு நான் கேப்டனாக இருந்த போது, அணியில் விராத் கோலியும் இருந்தார். அப்போது இளம் விராத், அணியில் இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று, தன்னைத்தானே வளர்த்து சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகி இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் எடுத்துக்காட்டாக அவர் இருக்கிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் […]
ராஜஸ்தான் நீதிமன்றம் அம்பேத்கருக்கு எதிராக ட்வீட் செய்த கிரிக்கெட் வீரர் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 26 அன்று, எந்த அம்பேத்கர், அரசியல் சாசனத்தை வகுத்தவரா? அல்லது இடஒதுக்கீடு என்கிற நோயைப் பரப்பியவரா என்று பிரபல கிரிக்கெட் வீரர் பாண்டியா கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த ட்வீட் தனது சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக மேக்வால் என்கிற வழக்கறிஞர், ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாண்டியா மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு […]
டிஆர்எஸ் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் இந்த வருடம் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை முதல் முறையாக அறிமுகமாகிறது. பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது.போட்டி குறித்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறும்போது, ‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ் முறை, முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்சில் […]