டெல்லி: 15 இந்தியர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த குவைத் அரசுக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். 119 இந்தியர்களின் தண்டனை காலத்தையும் குவைத் அரசு குறைந்த்துள்ளது என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். ஆனால் இதற்கான முயற்சிகளை எல்லாம் மேற்கொண்டது கேரளா இடது முன்னணி முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மட்டுமே. அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த காரியம் தன்னால் நடந்தது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அரசு தனது தவறான பொருளாதார கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவை சேர்ந்தவர்களே மத்திய மோடி அரசின் பொருளாதார கொள்கையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவே மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்தித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை அவசரகதியில் அமல்படுத்தியுள்ளதால் […]
முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் இந்திய பொருளாதாரத்தை சிதைத்து விட்டார்கள் என்று பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா சாமிபத்தில் பேசியிருந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த சின்ஹா ஆளும் பாஜக அரசை இவ்வாறு விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருண் ஜெட்லி பின்வருமாறு பேசியுள்ளார். சின்ஹா […]
மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகில் உள்ள 25 வயது வாலிபனால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் அந்த வாலிபனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டுக்கு வெளியே விளையாட சென்றார். அதன் பிறகு வெகுநேரமாகியும் அந்த சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி […]
புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 400 போலீஸாரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சுனில்குமார் கௌதம் உத்தரவிட்டார். புதுச்சேரி சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் டிஜிபி சுனில்குமார் கெளதம் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பண்டிகைக்காலங்களில் போலீசார் கடைகளில் மாமூல் வாங்குவது குறித்து பல புகார்கள் வந்தது. ஏற்கனவே போலீசார் இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்திருந்தார். இதனைத்தடுக்கும் வகையில் புதுச்சேரி […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை காரில் கடத்தி சென்று 23 பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான் புதிதாக வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்வையிட்டுவிட்டு வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாகவும், அப்போது காரில் வந்த இரண்டு இளைஞர்கள் தன்னை காரில் கடத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் காரில் வைத்தே […]
டில்லியை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.டில்லியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் ராஜஸ்தானின் பிகாநிர் பகுதியில் , கடந்த செப்., 25 அன்று சாலையில் நின்று கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த சிலர் அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றனர். பின்னர், மேலும் சிலரை அழைத்து காரில் பலாத்காரம் செய்துவிட்டு கடத்திய இடத்தில் இறக்கிவிட்டு சென்றனர். இந்த பெண் நேற்று(செப்.,28) போலீசில் தன்னை 23 […]
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற முடியாதவர், தன்னை விமர்சனம் செய்வதாகவும், கறுப்பு பணம் குறித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்தவதாக பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.ஜெட்லியின் நண்பர்:இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால், ஜெட்லி தற்போது நிதியமைச்சராக இருந்திருக்க முடியாது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் எனது நண்பர் இல்லை. ஆனால், அவர் ஜெட்லியின் நண்பர். ஜெட்லி எனது பின்னணி பற்றி மறந்துவிட்டார். அரசியலில் நுழைவதற்கு முன் பல […]
டெல்லி : இந்தியாவில் சிசுக்கள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 2016-ல் 1000-க்கு 34 என்ற அளவில் இந்தியாவில் சிசுக்கள் மரணம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பை: எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. கூட்டத்தில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தொடர் விடுமுறையால் மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நேற்று முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் பீதியடைந்த மக்கள் அங்கும் இங்குமாக முண்டியடித்துக்கொண்டு ஓடினர். மக்கள் ஓட்டத்தால் ரயில் நிலைய மேம்பாலத்தில் பெரும் கூட்ட […]
கேரளா வந்த ஷார்ஜா அதிபர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காஸிமியிடம் முதல்வர் பிணராயி விஜயன் ஷார்ஜா சிறைகளில் இருக்கும் இந்திய கைதிகளை விடுவிக்க வேண்டுகோள் வைத்ததும் அதை ஏற்று அவர் 149 பேரை விடுதலை செய்வதாக அறிவித்ததும் நாம் அறிந்ததே. இந்த விஷயத்தை தான் செய்ததாக மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் டூ வீட்டரில் எழுதி விட்டு கேரள மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கும் இந்த சுவாரசியங்களெல்லாம் ஒருபுறமிருக்க, முதல்வர் பிணராய் விஜயன் கைதிகளின் விடுதலை விஷயத்தில் அடுத்த […]
மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராம்சரண் ராம்தாஸ் (21), போதை பழக்கத்துக்கு அடிமையான இவர் தனது உறவினர்கள் உட்பட 12 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ராம்சரணை திருத்த அவர் தாய் முயன்றுள்ளார், ஆனால் பெற்ற தாய் மற்றும் வளர்ப்பு தாயையுமே ராம்சரண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் மகன் மேல் வெறுப்படைந்த தாய் அவரை கொல்ல முடிவு செய்து கூலிப்படைக்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். இதையடுத்து ராம்சரணை தனியாக அழைத்து சென்ற கூலிப்படையினர் […]
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிம்மின் இளைய சகோதரர் இக்பால் கஷ்கர், நேற்று இரவு (திங்கள்கிழமை) அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். 1993-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 260 பொதுமக்கள் பலியாயினர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மிக முக்கிய காரணம் தாவூத் இப்ராஹிம். என்ற நிழல் உலக தாதா என்பது விசாரணையில் தெரிய வந்தது. அன்று முதல் தாவூத்தை கைது செய்திட இந்தியா முயன்று வருகிறது. அவருக்கு பாகிஸ்தான் […]
டார்ஜிலிங்: மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் அரசு அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் வன்முறையால் சுற்றுலா அலுவலகத்தில் இருந்த கணினிகள் எரிந்து நாசாமாகியுள்ளன. மேலும் வன்முறையால் டார்ஜிலிங்கில் பதற்றம் நிலவுகிறது
பந்திபோரா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் ராணுவத்தினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் ஒன்றில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுடில்லி : உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்து ஸ்டான்போர்ட் பல்கலை., சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 700,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இப்பட்டியலில் இந்தியா 39 வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 4297 அடி மட்டுமே நடக்கிறார்கள். அதிகபட்சமாக சீனர்கள் நாள் ஒன்றிற்கு 6880 அடிகள் நடக்கிறார்கள். மிக குறைந்த அளவாக இந்தோனேசிய மக்கள் 3513 அடிகள் மட்டுமே நடக்கிறார்கள். அமெரிக்கர்கள் 4774 […]
டெல்லியில் 52 வயதான பெண் ஒருவர் அவரது இல்லத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். லக்ஷ்மி நகர் அருகே உள்ள இல்லத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடில்லி : தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களில் உள்ளன. உரிமம் பெறும் நடைமுறைகள், சூழ்நிலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொழில் தொடங்க வசதியான மாநிலங்கள் பட்டியலை நிதி ஆயோக் முதன்மைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் ஆகிய […]
கொல்கத்தா:மதக்கலவரத்தை தூண்டும் வகையில போலி தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி கலவரத்தை தூண்டிய பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவின் ( ஐடி ) அமைப்பு செயலாளர் தருண் சென்குப்தா-வை இன்று மேற்கு வங்க காவலர்கள் கைது செய்தனர். பாஜக இந்தியாவில் மதகலவரத்தை தூண்டி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை குறுக்குவழியில் கைப்பற்றும் யுத்தியை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது மேற்கு வங்கத்தை குறிவைத்து செயல்படுகிறது. தனது வழக்கமான பாணியான போலியாக புகைப்படம், […]
டெல்லி : 2017…ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் பணமதிப்பிழைப்பு நடவடிக்கையால் இந்தியாவில் 10.5 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று இந்தியப் பொருளாதார நடவடிக்கைக் கண்காணிப்பு மையம் (CMIF) அறிவித்துள்ளது. இப்போது அறிமுகப்படுத்தியுள்ள GST காரணமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் 10.5லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.