இந்தியா

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையேயான சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு நிறுத்தியுள்ளதால் இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்பு படைகளை பலப்படுத்தி வருகின்றன. அதேபோல, பாகிஸ்தானுக்கு இந்தியாவில் இருந்து பாயும் சிந்து நதியை தடுத்த நிறுத்த இந்திய […]

#Pakistan 6 Min Read
Chenab River

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இரு நாட்டு படைகளும் தங்கள் படைகளை பலப்படுத்தும் நோக்கில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இப்படியான சூழலில் பொதுமக்களும் இந்த போர் சூழும் சூழலில் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் போர்க்கால ஒத்திகையை நாளை (மே 7) நடத்த […]

India-pakistan 5 Min Read
War Mock Drill in India

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை சோதனை நடத்துகிறது. ஏற்கனவே இந்திய விமானப்படை போர் விமானங்கள் தரையிறங்கும் பயிற்சி மேற்கொண்டது. தற்போது அதனைத் தொடர்ந்து இந்திய கடற்படையும் தங்கள் ஆயுத சோதனையில் தீவிரம் காட்டியுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான DRDO மற்றும் இந்திய கடற்படை […]

DRDO 5 Min Read
MIGM Exp successfully tested by NAVY and DRDO

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உதவிய நபர்களையும் தேடும் பணிகள் இந்திய ராணுவத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் உள்ளூர் பகுதியில் உள்ளூர் போலீசாரின் தேடுதல் தீவிரமாகியுள்ளது. அப்போது கடந்த சனிக்கிழமை அன்று காஷ்மீர் குல்காம் பகுதியை சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே எனும் 23 வயது இளைஞர் காஷ்மீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். […]

indian army 5 Min Read
Kahmir person jumped into river and died

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் தங்கள் எதிரெதிர் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள், எல்லை பங்கீடுகளை முறித்துக்கொண்டுள்ளன. மேலும், இரு நாடுகளும் தங்கள் நாட்டு எல்லைகளில் ராணுவத்தினை பலப்படுத்தி போர் பதற்றத்தை அதிகரிக்க செய்து வருகின்றன. ஏவுகணை சோதனை, வான்வழி சோதனை, எல்லைகளில் வீரர்களை குவிப்பது. அவ்வபோது உயிர்சேதமின்றி சிறிய துப்பாக்கிச்சூடு தாக்குதல் என இந்தியா – பாகிஸ்தான் […]

#Delhi 4 Min Read
India Pakistan - Postal Services

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் மின்கசிவு ஏற்பட்டது. இந்த மின்கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்பால் , அதனை சுவாசித்த நோயாளிகள் 5 பேர் உயிரிழந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த உயிரிழப்புகளை இயற்கைக்கு மாறான உயிரிழப்புகள் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். நேற்று இரவு இந்த மின்கசிவு விபத்தால் வெஸ்ட் ஹில்லில் வசிக்கும் கோபாலன், கோயிலாண்டியைச் […]

Kerala govt hospital 5 Min Read
Kozhikode Medical College smoke mishap Kozhikode Medical College smoke mishap

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவாவில் உள்ள ஷிர்காவோவில் நடந்த ஸ்ரீ லைராய் ஜத்ரா திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30க்கும் […]

#Goa 3 Min Read
Goa stampede

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து , இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இரு நாட்டு எல்லையிலும் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி இந்திய எல்லைக்குகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதாகவும் […]

#Kashmir 4 Min Read
India Pakistan border

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்பொது, காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் கல்லூரி (ஜிஎம்சி) மற்றும் மாபுசாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் கூட்ட நெரிசலுக்கான காரணம் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. இந்த விபத்து சனிக்கிழமை அதிகாலையில் நடந்தது, கோயிலில் பல நூற்றாண்டுகள் […]

#Goa 3 Min Read
Shirgao Jatra In Goa

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்! 

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்வில் இந்தியாவின் டிஜிட்டல் துறை வளர்ச்சி பற்றி பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அப்போது இதில் கலந்து கொண்ட யூ-டியூப் தலைமை செயல் அதிகாரி நீல் மோகன் பல்வேறு சுவாரஷ்ய தகவல்களை தெரிவித்தார். மோகன் நீல் பேசுகையில், இந்தியா தற்போது கன்டென்ட் கிரியேட்டர்களின் நாடாக மாறி வருகிறது. இந்திய கிரியேட்டர்களின் புதுபுது வீடியோக்கள் வெளிநாட்டவரை […]

Indian Youtubers 3 Min Read
Youtube CEO Neal Mohan

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் வீரர்கள் குவிக்கப்பட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல இந்திய விமானப்படையும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன. அதில், உத்திர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள கங்கா அதிவிரைவு சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் […]

Ganga Expressway 6 Min Read
Ganga Expressway IAF

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள முதல்வர் பினராயிவிஜயன், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்ட இந்த துறைமுகத்தால், சர்வதேச வர்த்தகம் அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழிஞ்சம் துறைமுகத்தின் கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது என்பதால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். பெரிய சரக்குக் கப்பல்கள் கொழும்புவில் நிறுத்துவதற்குப் பதிலாக இந்தியக் கடற்கரைக்கே வருவதை உறுதிசெய்யும் வகையில் […]

#Kerala 5 Min Read
pm modi - kerala port

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அட்டாரி எல்லையின் வாயிலை பாகிஸ்தான் முற்றிலுமாக மூடியுள்ளது. இதன் காரணமாக பல பாகிஸ்தான் குடிமக்களின் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் நாடு திரும்புவதற்கு மத்திய அரசு வழங்கிய காலக்கெடு முழுமையாக முடிவடைந்ததை அடுத்து, 786 […]

Attari 5 Min Read
Attari Wagah

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல் விவகாரத்தில் நல்லிணக்கத்தைப் பேணுமாறு ஹிமான்ஷி நர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த நிலையில்,  முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி […]

Himanshi Narwal 4 Min Read
Navy officer's wife - Pahalgam attack

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளில் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று.  இந்திய அரசு இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டிய நிலையில், பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கை விடுத்தது வருகிறது. இப்படியான […]

Amit shah 5 Min Read
Amit Shah about Pahalgam Attack

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது கடந்த 25 ஆண்டுகளில் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும். இந்திய அரசு இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டிய நிலையில், பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கை விடுத்தது வருகிறது. இப்படியான பரபரப்பான சூழலில் இது […]

Narendra Modi 5 Min Read

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும், இத்தாக்குதலை அடுத்து வெளியூரில், வெளிமாநிலங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு இன்று […]

#Delhi 4 Min Read
Delhi Supreme Court of India

”அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி” – மத்திய அரசின் புதிய உத்தரவு.!

டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஏற்றுமதி வரி இன்று (மே 1) அமலுக்கு வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற புழுங்கல் அரிசி, புவிசார் குறியீடு பெறாத புழுங்கல் அரிசி என இரண்டிற்கும் வரி விதிக்கப்படுகிறது. மேலும், இதில் அரை […]

#Rice 3 Min Read
Rice Tax

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி! மத்திய அரசு அளித்த முக்கிய தளர்வு..,

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ன. இரு நாட்டு எல்லைகள் மூடப்பட்டன. இதனால், இரு நாட்டு எல்லை அருகே இருபப்வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக பஞ்சாப் மாநிலம் அமிர்தாரஸில் மாவட்டத்தில் உள்ள அட்டாரி – வாகா எல்லை பகுதி மூடியதால் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்கள் […]

#Pakistan 4 Min Read
Pakistan - Attari

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது.! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக எல்பிஜி சிலிண்டரின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாறும், அதன் தகவல்கள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் அதிகாலையில் புதுப்பிக்கப்படும். அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் இன்று முதல் ஒரு சிலிண்டர் ரூ.1,906-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு […]

#cylinder 3 Min Read
Commercial gas cylinder