நீறில்லாமல் கூடாது நெற்றி என்றனர் நம் முன்னோர்கள். அத்தகைய திருநீறின் சிறப்பு குறித்த சிறப்பு பதிகம். இந்த திருநீறின் மகிமைகள் பற்றி ஒருசில வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஒரு மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நமக்கு எவ்வளவு ஆற்றல் கிடைக்கின்றதோ அதே அளவிற்கான மகிமையை இந்த திருநீறு வைத்துக் கொள்வதாலும் நம்மால் பெறமுடியும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறுதியில் மிஞ்சுவது ஒரு பிடி சாம்பல் தான் என்பதை நமக்கு உணர்த்துவது இந்த திருநீரு. ‘நீறு’ என்றால் சாம்பல். திருநீறு […]
நம்மில் பலர் கோவிலுக்கு சென்று விட்டு இறைவனை வணங்கி திரும்பி வரும் போது தர்மம் செய்வதை தவிர்த்து இருக்கிறோம். இது தவறான மூடநம்பிக்கை ஆகும். ஒருவருக்கு வேண்டிய நேரத்தில் உரிய உதவியை செய்வதே இந்த தர்மம். நம் மனம் சந்தோஷமாக இருக்கும்போதோ அல்லது ஏதேனும் குழப்பமான மனநிலையில் இருக்கும்போதோ பெரும்பாலானோர் தங்களது இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ள ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி நாம் செல்கையில் இறைவனை வணங்கி விட்டு திரும்பி வரும்போது வாசலில் சிலர் தர்மம் கேட்பதற்காக […]
நம்மில் பலர் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி வழிபட்டு காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இறைவனுக்கு காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா என்பதை தற்போது ஒரு ஆன்மிக கதை மூலம் பார்க்கலாம். நாம் அடிக்கடியோ அல்லது நம் மனம் சோர்வடையும் நல்லது மகிழ்ச்சி அடையும் நேரத்தில் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றோம். அவ்வாறு செல்லும்போது இறைவனை வணங்கிவிட்டு பெரும்பாலானோர் கோவில் உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கைகளை செலுத்துவார்கள். ஒரு ரூபாயாக இருந்தாலும் ஒரு கோடி ரூபாயாக […]
எல்லாம் நன்றாக இருந்தும் ஏதோ ஒன்று நம் முன்னேற்றத்தை தடுத்து கொண்டே இருக்கும். அப்படி தடுத்து கொண்டிருக்குமானால் அது நீங்கள் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் பிரதிபலனாக கூட இருக்கலாம். நம்முடைய நிகழ்காலம் அனைத்தும் நாம் சரியாக செய்தும், ஏதோ ஒன்று அந்த செயலை தடுத்து நீங்கள் நினைத்த காரியத்தை அடைய முடியாமல் ஆகிவிடுகிறது. அதற்கு நம்மில் பலர் முன் ஜென்மத்தில் நாம் என்ன தவறு செய்தோமோ என்று எண்ண வைத்து விடுகிறது. அப்படி நம் முன் ஜென்மத்தில் […]
வீட்டில் செல்வம் பெறுக வேண்டும் என நாம் அனைவரும் என்ன செய்யவேண்டும் என்பதை விட என்னவெல்லாம் செய்யக்கூடாது என தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே நம் வீட்டு மஹாலக்ஷ்மி நம் வீட்டை விட்டு நீங்காமல் இருப்பாள். நம் அனைவர்க்கும் நம் வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். பலர் நாங்கள் நன்றாக உழைக்கின்றோம் சம்பாதிக்கின்றோம் ,ஆனால், எனோ செல்வம் வீட்டில் தங்குவதில்லை என கூறுவர். நாம் நம் வீட்டில் செல்வம் சேர்க்க என்னவெல்லாம் செய்ய […]
சரியான வயதில் நல்ல துணையுடன் திருமணம் நடக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர். ஆனால், அதற்கான சூழ்நிலைகள் தற்காலத்தில் அமைவது மிகவும் கடினமாக இருக்கிறது. பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகள் நன்றாக வளர வேண்டும், நன்றாக படிக்க வேண்டும், அதன் பின் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்று ஆயிரம் கவலை இருக்கிறது. அதனில் மேலாய், திருமண வயதை தாண்டிய பின்பும் திருமணம் ஆகவில்லை என்றால் பெற்றோர் கவலை அதிகமாகி விடுகிறது. அதிலும், தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தில் […]
கடவுளை வணங்கும் போது நாம் செய்யும் முக்கிய செயல்களில் ஒன்று கற்பூரம் காட்டுவது. அந்த கற்பூரமானது மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. அதன் பலன்கள் நம் உடலுக்கும் நல்லது தரும். நாம் கடவுளை கோவில் சென்று வணங்கும் போது அங்கு கர்ப்பகிரகத்தில் உள்ள கடவுள் சிலை நோக்கி கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு அந்த கற்பூரமானது நமக்கு காட்டப்படுகிறது. அதாவது பெரும்பாலான கோவில்களில் கருவறையில் மின்விளக்குகள் இருப்பதில்லை. கற்பூர ஒளியில் மூலம் மட்டுமே நாம் இறைவனை தரிசிக்க முடியும். […]
போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நமது முன்னேற்றத்தை தடுக்க வைக்கப்படும் மாந்தீரிக செயல்தான் செய்வினை. இந்த செய்வினையை தவிர்க்க துர்க்கை அம்மனுக்கு குருதி பூஜை செய்தால் நம் வாழ்வு சரியாகிவிடும். இந்த உலகம் மிகவும் போட்டி நிறைந்தது. அதில் ஒருவர் முன்னேறுவதற்கு எந்த அளவுக்கு வழி தேடுகிறார்களோ, அதே அளவுக்கு ஒருவரின் முன்னேற்ற தடுக்கவும் வழியை கண்டுபிடித்துவிடுவார்கள். அதில் முக்கியமானது செய்வினை. இந்த செய்வினையானது நமது ஜாதகம் நன்றாக இருந்தாலும் நல்ல நேரம் கூடி வந்தாலும் எந்த […]
நம் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். அதுபோல நல்ல நேரம், கெட்ட நேரம் மாறி மாறி வரும். தொடர்ந்து நல்ல நேரம் மட்டுமே வந்தால், கடவுள் இருப்பதை மறந்துவிடுவோம். அதனால்தான் அவ்வபோது கொஞ்சம் கெட்ட நேரமும் நம்மை தேடி வரும். சிலருக்கு வெற்றியானது எளிதில் கிடைத்து விடும். ஆனால், பலருக்கு வெற்றியானது கடுமையான முயற்சி செய்தால் தான் கிடைக்கும். சிலருக்கு அப்படி கடுமையாக உழைத்தாலும் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் பெரும்பாலானோர் நமக்கு […]
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நாளாக இருக்கிறது. அதனால் அந்த தெய்வத்திற்கு பிடித்த நிறங்களில் உடை அணிவது நன்மை பயக்கும். கருப்பு சட்டை என்பது பொதுவாக எதிர்ப்பை காட்டும் வண்ணம் குறிக்கப்படுவதால் அதனை பெரும்பாலும் விசேஷ விழாக்களில் தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதனால் அந்த தெய்வத்திற்கு பிடித்த நிற உடையை அணிந்து கொண்டால், அன்றைய நாள் நமக்கு மிகவும் உகந்த நாளாக அமைந்துவிடும். கருப்பு என்பது நம்பிக்கை. […]
மணிபர்ஸ் எப்படி இருந்தால் பணம் கொட்டும் என சில நடைமுறைகள் இருக்கிறது. பர்ஸ் கருப்பு நிறத்தில் இருக்க கூடாது. பின் பாக்கெட்டில் வைக்க கூடாது. ஆயுதம் எதுவும் இருக்க கூடாது. தற்காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் உழைப்பை விட அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து வாழ்கின்றனர். கடுமையான முயற்சி கண்டிப்பாக அதிர்ஷ்டத்தை தேடி தரும். இருந்தாலும், சில நேரம் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் ஆன்மிக ரீதியாக அதிர்ஷ்டத்தை வரவழைக்கும். அப்படி நமது அபர்ஸின் மூலம் பணம் கொழிக்கும். அதிர்ஷ்டத்தை […]
கார்த்திகை மாதம் முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்து விடுவர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளுக்கு பலவித மகதத்துவம் உள்ளது. கார்த்திகை மாதம் துவங்கிய முதலே ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு சபரிமலை செல்வதற்காக கடுமையான விரதம் இருந்து வருகின்றனர். 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலை பயணத்தை தொடங்குகின்றனர். அப்படி தொடங்கி சபரிமலை கோவிலுக்கு சென்றவுடன் 18 படிகளை கடந்து ஐயப்பனை தரிசிக்க […]
நாம் அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை அதில் பிரதான பிரச்சனை வீட்டில் செல்வம் தங்குவதில்லை. அல்லது பெருகவில்லை. இதற்கு நம் வீட்டை பாதுகாத்து கவனித்து வந்தாலே , வீட்டில் செல்வம் பெருகும். வளம் கொழிக்கும். நம் ஒவ்வொருக்கும் ஒரு சில பிரச்சனைகள் உண்டு. அதில் அதிகமானோருக்கு வீட்டில் செல்வம் தங்குவது இல்லை எனவும், வந்த செல்வம் மேலும் வளர்ச்சி பெறவில்லை எனவும் மிகுந்த கவலை அடைவார்கள். அப்படிப்பட்ட சில குறைகளை தீர்க்க நம் வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாத்து […]
வீட்டு தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும் அதில் ஒரு துளசி செடி இருந்தால் அது நந்தவனமாக போற்றப்படும். இப்படிப்பட்ட துளசி செடியின் ஆன்மீக பலன்களை தற்போது பார்க்கலாம். இந்த கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாளானது வைகுண்ட ஏகாதசிக்கு இணையாக கருதப்படுகிறது. அன்றைய நாளுக்கு அடுத்த நாள் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. இதுவும் தீபாவளி, பொங்கல் பண்டிகை போல உற்றார் உறவினருடன் கொண்டாடப்பட வேண்டிய ஆன்மீக விழாவாகும். துளசி தாய் பகவான் விஷ்ணுவை மணந்து […]
அமாவாசை, பௌர்ணமி, மாத பிறப்பு, ஜென்ம நட்சத்திர நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. தேங்காய், பூசணி போன்றவைகளை பெண்கள் உடைக்க கூடாது. கர்ப்பமான பெண்கள் தேங்காய், பூசணி உடைக்கும் இடங்களில் நிற்கவே கூடாது. செய்வாய், வெள்ளிகளில் நிலைக்கதவில் மஞ்சள் பூசவேண்டும். அது நம் வீட்டில் தீய சக்திகள் உள்ளே வராமல் தடுக்கும். விஷ பூச்சிகள் வீட்டில் அண்டாது. சனி பகவானுக்கு வேண்டி எள்விளக்கு வீட்டில் ஏற்றக்கூடாது. வீட்டில் யாரேனும் தூங்கிக்கொண்டிருந்தால் விளக்கேற்ற கூடாது. அவர்கள் […]
நாம் வீடுகளில் விளக்கு ஏற்றி பட்டால் நமக்கு மனஅமைதியும் சந்தோஷமும் கிடைக்கும். எப்போதும் வீட்டில் மங்களம் நிறைந்து இருக்கும். தினமும் நாம் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறோம். அந்த விளக்கு சில சமயங்களில் தீடீரென அணைந்து விட்டால் அதை நாம் கெட்ட சகுனமாக நினைத்து புலம்பி தவித்து வருகிறோம்.விளக்கு சில சமயங்களில் காற்றினால் அணைந்து விட கூடும். மேலும் திரி சரியில்லாமல் கூட சில சமயங்களில் அணைந்து விடும்.சில நேரங்களில் நாம் கவனிக்காமல் இருந்தால் எண்ணெய் […]
ராகு காலத்தில் பொதுவாக நற்காரியங்களை செய்ய கூடாது என்பதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அதை பற்றி நமது முன்னோர்களும் கூறி இருக்கிறார்கள்.அப்படி செய்தாளல் அது பலவிதமான துன்பங்களையும் நமக்கு தந்து விடும். இந்த பதிப்பில் ஏன் ராகு காலத்தில் நற்காரியங்களை செய்ய கூடாது என்பதை படித்தறியலாம்: பொதுவாக ஒரு நாளைக்கு ராகு காலம் 1 1/2 மணி நேரமும் எமகண்டம் 1 1/2 மணிநேரமும் அம்பிகையை பூஜை செய்கின்றன. இந்நிலையில் ராகு காலத்தில் சுப காரியங்களை செய்ய […]
தினமும் பூஜை அறையில் நீர் வைப்பதால் என்ன அதிசயம் நடக்கும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். அனைத்து உயிர்களும் உயிர் வாழ கற்று எப்படி அவசியமோ அதேபோல் தண்ணீரும் அவசியம். தண்ணீர் தாக்கத்தை மட்டும் தீர்க்காமல் பல செயல் பாடுகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஆன்மிக சடங்குகளின் ஒரு முக்கிய பொருளாகவும் விளங்குகிறது. நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீரை கொண்டு சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து […]
புருவத்தின் மத்தியில் பொட்டு வைப்பது தமிழ் பெண்களின் பாரம்பரிய ஒன்றாகும்.ஏன் இந்தியா முழுவதும் உள்ள பெண்களும் பொட்டு வைப்பதில் ஆர்வமும்,அதில் பொதிந்து இருக்கும் அற்புதங்களும் ஏராளாம். அந்த காலத்தில் போட்டயை பெரியதாக வைப்பது ஒரு ட்ரண்டாக இருந்தது.பின் அப்படியே சற்று குறைத்து பொட்டை வைக்க தொடங்கினர்.பின் அப்படியே இல்லாமல் போய் இப்பொழுது விழாக்காள்,முக்கிய விஷசங்கள் போன்ற நிகழ்வுகளில் மட்டுமே பெண்களின் புருவத்தில் பொட்டை காண முடியும். அதிலும் பொட்டை இப்பொழுது போல் ஸ்டிக்கர் பொட்டு இல்லாமல் புருவத்தின் […]
முன்னோர் என்பவர்கள் நம்முடைய மூதாதையர்கள் (தாத்தா,அவருடைய அப்பா) என்று நம்முடைய முன்னோர்களை வணங்கினால் வாழ்வில் வசந்த காற்று தான் மாறாக முன்னோர்களின் சாபத்தை பெற்று இருந்தோமேயானால் வீட்டில் கடன் பிரச்சனை,வேலை கிடைப்பதில் பிரச்சனை,திருமண தடை ,குழந்தை பேறு கிடைப்பதில் தாமதாம், இதில் சிலர் எல்லா கோவிலுக்கும் போய்ட்டுடேன் ஆனா ஒன்னு நடக்க மாண்டக்கமாட்டிங்கிது. என்று வருத்தப்படு வரும் உண்டு.இத்தகைய முன்னோர்களின் சாபத்தில் இருந்து விடுபடவும் அவர்களின் அருளை பெற வேண்டும்.ஏனென்றால் நாம் கடாவுளிடம் பெரும் பலன்களை நம் மீது கோப கொண்டு நம் […]