சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும். அதிகக் கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். வாகனச் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவைச் சந்திக்க நேரிடும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குக் கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க […]
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். தனாதிபதி சூரியன் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது ஏழாம் பார்வையால் ராசியைப் பார்க்கிறார். மற்றவர்கள் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்களிடம் பகை நீங்கும். வீண் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாகப் […]
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசிநாதன் புதன் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்தவொரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மையால் நன்மை கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடிச் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் […]
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பாக்கியஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.அஷ்டமத்துச் சனி நடந்தாலும் ராசிநாதன் சஞ்சாரம் மிக அனுகூலமாக இருக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். ராசியைச் செவ்வாய் பார்ப்பதால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய வர்த்தக ஆர்டர்கள் பெறுவதில் […]
மேஷ ராசிக்காரர்களே ! இந்த வாரம் மற்றவர்களுடன் இருந்த பகை மறையும். ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதன் மூலம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பார்கள். சஞ்சலமான மனநிலை அகலும். தனாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யத் தொடங்குவதால் தர்ம சிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் […]
3 நாள்கள் நடைபெறும் மகோத்சவம் விழா கோரக்பூரில் நாளை தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் மைதானத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோரக்பூர் மகோத்சவத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தூத்துக்குடி : பிஅன்டி காலனியில் உள்ள ஶ்ரீ ராதா கிருஷ்ண பொருமாள் ஆலயத்தில் ஆண்டாளுக்கு கூடாரை வல்லி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
“இந்து என்பது மதம் அல்ல; வாழ்வியல் நெறி” எனஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தபின் இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதுவரையில் இந்தியாவில் துணை குடியரசு தலைவர்கள் யாரும் இப்படி ஒரு தனிப்பட்ட மதத்தினை பற்றி பேசியதே கிடையாது.இப்போதுதான் முதல் முறையாக வெங்கையா நாயுடு பேசியுள்ளார். மதச்சார்பற்ற இந்தியாவை இது கேள்வி எழுப்பும் வகையில் உள்ளது.
துர்க்கையின் சிறப்பை அறியாமல் நாம் யாரும் இல்லை ….அந்த துர்கையின் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும் … வீட்டிலும் சரி, கோயிலிலும் சரி… விளக்கேற்றுவதும் விளக்கேற்றி வழிபடுவதும் ரொம்பவே விசேஷம்! கோயிலுக்குச் செல்லும் போது, அவசியம் விளக்கேற்றுங்கள். விளக்கேற்றி, வழிபாடு செய்யுங்கள். அந்த வழிபாட்டின் போது, மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒளிமயமான வாழ்க்கை நிச்சயம் கிடைக்கப் பெறுவீர்கள்! கோயிலுக்கு எப்போதெல்லாம் தரிசனம் செய்யச் செல்கிறோமோ, அப்போது ஆலயத்தில் விளக்கேற்றச் சொல்லி அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள். மாதந்தோறும் கோயில்களுக்கு […]
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் கவனித்து வருகிறது. தேவஸ்தானத்தின் பல்வேறு பிரிவுகளில், ஹிந்து அல்லாத பிற மதத்தை சேர்ந்த பலர், பணியாற்றுவதாகவும், அவர்கள், மத மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. திருமலை கோவில் விதிமுறைகளின்படி, ஹிந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே, கோவிலில் பணியாற்ற முடியும். ஆனால், அந்த கோவிலில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர், தன் அதிகாரப்பூர்வ காரில், தினமும், திருப்பதியில் உள்ள சர்ச்சுக்கு சென்று […]
டாடா குழுமத்தின் முன்னால் தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் . திருப்பதியில் திருமலை தேவஸ்தானத்துடன் இணைந்து ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம் […]
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் இணைந்திருந்தாலோ, தொடர்பு பெற்றாலோ, கணவன் மனைவி இருவரும் சதா சர்வ காலமும் சண்டை சச்சரவு என இருப்பார்கள், ஆனால் வருடம் தவறாமல் குழந்தை பெற்றுக்கொள்வார்கள். இதுதான் சுக்கிரன், செவ்வாய் எனும் ரகசிய நட்பு. (ஆனால் இதை அறிந்த ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் அதிபதியான சூரியன், தான் படைத்த செவ்வாயை நட்பு கிரகமாக ஏற்காமல் சமம் என்ற பத்தோடு ஒன்று, இத்தோடு இதுவும் ஒன்று என சற்று விலகியே இருக்கிறார்.) எனவேதான் சுக்கிரனின் ஆட்சி […]
திருவண்ணாமலையில் கோயிலில் உண்டியல் ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் காணிக்கையை பொருத்து கிடைக்கும் . அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத உண்டியல் காணிக்கை ரூ.1.33 கோடி கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து, இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசித்து விட்டு செல்கிறார்கள்.இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமியன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். பவுர்ணமி முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி மார்கழி மாத பவுர்ணமி […]
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். சூரியனின் சஞ்சாரம் அனுகூலமான பலன்களைத் தரும். பணவரவால் மனதிருப்தி உண்டு. புதிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 10-ல் இருப்பதால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொழில், வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதிநிலைமை சீர்படும். உத்தியோகத்தில் […]
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வாக்குவாதங்கள் அகலும். நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பூர்விகச் சொத்துக்களால் வருமானம் கூடும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கும். தொழில், வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். பெண்கள் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு […]
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். ராசியில் இருக்கும் கேதுவின் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்புடன் இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். குடும்பத்திலிருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டியிருக்கும். தொழில், வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் […]
தனுஷு ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் வருவாயைத் தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கிக் காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூரப் பயணத்தால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்திலிருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை […]
விருச்சக ராசிக்காரர்களே! இந்த வாரம் வரவுக்கேற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் […]
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். நீண்ட நாட்களாக இருந்த எதிர்ப்புகள் விலகும். குருவின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான […]
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்கொண்ட பெண்கள் வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்ற கேள்வி பல காலமாக நிலவி வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றம் கேரள மாநில அரசிடமும், திருவாங்கூர் தேவசம் போர்டிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்தியில், “வயதினை […]