நாம் தெரிந்தோ தெரியாமலோ அல்லது சூழ்நிலையின் காரணத்தினாலோ பல பாவங்களை செய்திருப்போம் அதை போக்க இந்த ரதசப்தமியை பயன்படுத்திக் கொள்ளலாம்.பிப்ரவரி மாதம் 16 2024 அன்று ரதசப்தமி வர இருக்கிறது. இந்நாளின் சிறப்பு மற்றும் பாவம் போக்கும் குளியல் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ரதசப்தமியின் சிறப்பு ரதசப்தமியை சூரிய ஜெயந்தி எனவும் கூறுவர், சூரிய பகவானுக்கு உரிய மிக முக்கிய தினங்களில் ரதசப்தமியும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் […]
ஒரு சிலர் வறுமையின் பிடியில் சிக்கி வெளிவர முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள் அவர்கள் நாளை வரவிருக்கும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன் சிறப்புகளையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மாசி மாதம் 1ந் தேதி( பிப்ரவரி 13,2024) நாளை விஷ்ணுபதி புண்ணிய காலம் வர இருக்கிறது. இந்த காலம் வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே வரும். இந்நாளில் விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் ,கருட பகவானையும் பூஜை செய்ய உகந்த காலமாக கருதப்படுகிறது. விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் […]
9- 2 -2024 அன்று தை அமாவாசை வர இருக்கிறது. மாதம் தோறும் அமாவாசை வந்தாலும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசையின் சிறப்பு, துவங்கும் நேரம் முன்னோர்களுக்கு படையல் போடும் நேரம், தர்ப்பணம் கொடுக்கும் நேரம் ,அன்று என்னெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தை அமாவாசையின் சிறப்பு ஒரு ஆண்டின் மூன்று அமாவாசைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை. இதில் தற்போது […]
நம்மில் பலருக்கும் தோன்றும் சந்தேகங்களில் ஒன்று அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜை செய்யலாமா …விளக்கு ஏற்றலாமா மற்றும் கவசங்கள் பதிகங்கள் போன்றவற்றை படிக்கலாமா என சந்தேகம் ஏற்படும் அதை தெளிவுபடுத்தும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும். பொதுவாக அசைவம் சாப்பிடுவது அவரவர் மன ஓட்டத்தை பொருத்து தான். ஆனால் இந்த உலக மக்கள் அனைவரும் உயர்வு பெற வேண்டும் என்று பல ஞானிகள் நல்ல விஷயங்களை சொல்லி சென்றுள்ளனர், இப்படி ஞானப் பெரியவர்கள் நமக்கு சைவப் பாதையை காட்டியதற்கு […]
கோவிலுக்கு நாம் சென்று வழிபடும்போது சுவாமி திரை போட்டு மறைத்திருந்தால் அவ்வபோது நாம் வழிபடலாமா சந்தேகம் பலருக்கும் ஏற்படும் அதைப்பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வழிபாடும் முறை பொதுவாக நம் ஆலயத்திற்கு செல்லும் போது அபிஷேகம் நேரம் அறிந்து செல்வதில்லை .ஒவ்வொரு ஆலயத்திலும் அபிஷேக நேரம் மாறுபடும் அது மட்டுமல்லாமல் பெரிய பெரிய கோவில்களில் அபிஷேக நேரம் விசேஷ நாட்களில் மாறுபடும் என அங்கேயே எழுதி இருப்பார்கள். இது அனைவருக்குமே தெரிந்திருக்கும் என கூற முடியாது. ஆனால் […]
நம்மை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியது நம் அப்பா அம்மா தான். ஆனால் பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் ஒன்று இறந்தவர்களின் முறையான வழிபாட்டு முறை பற்றிய சந்தேகம்தான். அவற்றை தீர்க்கும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. வாழ்கின்ற காலங்களில் நம்மை எவ்வளவோ போற்றி பாதுகாத்து வளர்த்து இந்த அளவிற்கு நம்மை கொண்டு வந்தது நம் முன்னோர்களாகிய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி தான். ஒரு பொருள் கீழே விழுந்து விட்டால் அதை பக்கத்தில் உள்ளவர்கள் எடுத்துக் கொடுத்தால் சம்பந்தமே இல்லாதவர்களாக […]
தீபாவளி பண்டிகையானது தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட்டாலும், வடமாநிலங்களில் இன்று முதல் புதன் கிழமை வரையில் 5 நாள் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் முதல் நாளான இன்று (வெள்ளி – நவம்பர் 10, 2023 ) தந்தேராஸ் எனப்படும் தன்வந்திரி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளியை ஆயுர்வேத தீபாவளி என்றும் மக்கள் அழைக்கின்றனர். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்… தீபாவளி தினங்கள் : அதே போல, […]
வேண்டியதை அள்ளிக்கொடுக்கும் முருகப்பெருமானின் அருள் பெற தைப்பூசத்தன்று எப்படி வழிபடுவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனை செய்யப்படும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். தைபூசத்தன்றுதான் பார்வதி தேவி முருக பெருமானுக்கு வேல் வழங்கினார். இதைக்கொண்டு அசுரர்களை வதம் செய்து உலகை காத்தார் முருகப்பெருமான். சிறப்பான இந்த தினத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்க மனமுருகி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இன்றைய தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே […]
வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களை தீர்க்க இந்த விநாயகர் வழிபாடு செய்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும். வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமைகிறது. சிலர் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக நாட்களை கழிக்கின்றனர். சிலர் வாழ்நாள் முழுவதும் பல்வேறு கஷ்டங்களை சந்திக்கின்றனர். எந்த முயற்சி எடுத்தாலும் அதில் தோல்வியை தழுவுவது, அடுக்கடுக்காக கஷ்டங்களை சந்திப்பது இது போன்று தொடர்ந்து நேரும் சங்கடங்களில் இருந்து விடுபட முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமானின் வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வழிபாடு மூலமாக வேலையில் ஏற்படும் பிரச்சனை, […]
கிபி.30-ம் ஆண்டில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. கிறிஸ்து பட்ட பாடுகளையும், சிலுவையில் அவர் மரித்தததையும் நினைவுகூறும் விதமாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்து நமக்காக பாடுபட்டார் என்பதை நினைவு கூறுகின்றனர். இதனையடுத்து, அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. புனித வெள்ளிக்கு அடுத்த நாளான, சனிக்கிழமை அன்று அனைத்து தேவாலயங்களிலும் தியான வழிபாடுகள் நடைபெறும். மூன்றாவது நாளான ஞாயிற்று கிழமை உயிர்த்தெழுந்த ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கிறிஸ்தவர்கள் மிக […]
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவுகூர்கின்றார்கள். அந்நாளில் கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.கத்தோலிக்க திருச்சபை பெரிய வெள்ளிக் கிழமையில் கீழ்வரும் வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கிறது: மிகப் பழைமையான வழக்கப்படி, புனித வெள்ளியன்றும் புனித சனியன்றும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை. சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும். பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, […]
திருவண்ணாமலையில் உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் அருணாசலேஷ்வரர் கோவிலில் அருள்பாலித்து வரும் காலபைரவருக்கு 108 சங்காபிஷேக பூஜை வெகுச்சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும்,அவ்வைரஸ் அழிய வேண்டி கடந்த மார்ச்.,30 கோவிலில் தன்வந்திரி யாகம் நடைபெற்றது.இந்நிலையில் பங்குனி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு மக்கள் நலமுடன் வாழ கால பைரவருக்கு 108 சங்காபிஷகமும், சிறப்பு பூஜைகளும் நடை பெற்றது. ஊடங்கு உத்தரவு காரணமாக பக்தர்களை கோவிலினுள் அனுமதிக்கவில்லை
இன்று சதுர்த்தி அதுவும் வளர்பிறை சதுர்த்தி இந்த தினத்தில் அந்த வேழமுகத்தவனை மனதார வேண்டி நின்றால் மலை போல் வந்த துன்பம் பனி போல் விலகும்.கற்பக மூர்த்தி மிகவும் எளிமையானவர் எந்த நிலையிலும் தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு கற்பக விருட்ஷமாக வேண்டியதை அள்ளி கொடுப்பதில் அவருக்கு நிகர் எவர் என்று எண்ணும் அளவிற்கு ஏற்றத்தை அளிப்பவர் அவரை இந்த தினத்தில் வேண்டி நின்றால் நம்மை துன்பத்திற்கு ஆளாக்கும் எந்தவொரு செயலையும் தவிடு பொடியாக்கி விடுவார் கற்பக களிறு.அவரை […]
நம்முடைய குழந்தைகள் படிக்காமல் இருக்க காரணம் எதுவாக இருந்தாலும் அதை ஒரு நொடிப்பொழுதில் பொடியாக்கும் ஒரு சுலபமான வழிபாட்டின் மூலம் இதனை நீக்கிவிட முடியும்.அத்தகைய வழிபாடு என்ன என்றுதானே? இதோ இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகள் சுட்டித்தனம் கொண்டவர்கள் அதிகம் விளையாட்டில் ஆர்வம் கொள்வார்கள் அது தவறில்லை இளம் வயதில் விளையாட வேண்டும் ஆனால் படிக்கவும் வேண்டாமா? என்று சொல்வது காதில் கேட்கிறது கண்டிப்பாக கல்வி அவசியம் ஒருவருக்கு அவ்வாறு படிப்பில் கவனம் செலுத்தாத […]
சிவராத்திரி என்பது, பிரளய காலத்தின் போது படைக்கும் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரம்பொருள் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார் பரமேஸ்வரி.இந்த பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, ஈஸ்வரனிடம் நான் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த நாளை ஆண்டு தோறும் சிவராத்திரியாக […]
வாழ்க்கையில் வளங்களை அருளும் ரத சப்தமி இன்று நடைபெறுகிறது. விரதம் இருந்து எவ்வாறு அனுஷ்டிக்கலாம் என்று காண்போம் இன்று ரதசப்தமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.விழா நாயகனாக திகழ்பவர் சூரிய பகவான் அவரை விழிமேல் வழிவைத்து வழிபட வேண்டிய நாளாகும்.ஆரோக்கியத்தை அருள்பவர் கண் முதலான நோய்களை விரட்டுபவர்,ஞானம் அளிப்பவர் அவரை நினைத்து வழிபட்டால் நினைத்தை நிறைவேற்று தருவார் ஆதித்யன்.அவரை விரத மூலமாக வழிபாடு நடத்தினால் இன்னும் சிறப்பு என் கிறார் .அப்படி விரத வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலமாக நம்முடைய […]
இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி என்பது பெற்றோர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மாணவர்களின் கல்வி பிரச்சனையை தீர்க்க மரகத விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் பிரச்சனை தீர்ந்து விடும். தற்போதைய காலகட்டத்தில் கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த பெற்றோர்கள் எவ்வளவோ முயன்று வருகிறார்கள். சில நேரம் மாணவர்கள் ஞாபக சக்தி குறைபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு அதனால் அவர்கள் கல்வியில் முன்னேற்றம் இல்லாமல் மந்தமாக காணப் படுகிறார்கள். இந்த பிரச்சனை பெற்றோர்களுக்கு […]
நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி பூஜை நடத்தி வருகிறோம். இந்த பூஜையில் அலுவலகங்கள் , வீடுகளில் பூஜை செய்து பூஜை செய்வது வழக்கம். ஒன்பது மலர்கள் , ஒன்பது பழங்கள் , ஒன்பது தானியங்கள் , 9 பிரசாதங்கள் என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியை பூஜை செய்து வழிபடுவது நவராத்திரியின் சிறப்பம்சமாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் , ஒன்பது விதமான அம்பிகையை பூஜை செய்ய வேண்டும் அதனால் நம் வாழ்க்கை இன்னும் அழகாகவும் நலம் தரும் […]
நவராத்திரியை ஒன்பது ராத்திரி என்றும் புதிய ராத்திரி என்றும் அழைப்பார்கள். அந்த ஒன்பது தினங்களிலும் லஷ்மி பூஜை செய்து நாம் வழிபட்டு வருகிறோம். கல்வி,செல்வம் ,வீரம் என்று தானே கூறுவார்கள். அப்பிடியிருக்க கலை மகளுக்கு முதலில் பூஜை செய்யாமல் அலைமகளுக்கு பூஜை செய்வது ஏன் ? என்றும் பலர் மனதில் கேள்விகள் எழக்கூடும். ஆனால் சிருஷ்டி வரிசை படி பார்த்தால் முதலில் சரஸ்வதி ,லட்ஷமி ,துர்க்கை என்று தான் வரும்.ஆனால் நவராத்திரி முறைப்படி துர்க்கை ,லஷ்மி ,சரஸ்வதி […]
நம் அன்றாட வாழ்வில் இறை உடனே தொடங்கி அன்றைய பொழுதும் இறை உடனே நிறை பெறுகின்றது. எல்லாம் அவன் செயல் உலகை நடத்துவதும் அவனே நம்மை நடத்துவதும் அவனே இப்படி இறை சிந்தனையில் மூழ்கி இருப்பவர்களுக்கு இறைவனே அனைத்தும் நாம் தினமும் மேற்கொள்ளும் வழிபாடுகள் எல்லாம் நம் வாழ்க்கையை மாற்றி அமைத்து தான் உள்ளது. பொதுவாக இறை நம்பிக்கை உள்ளவர்களிடம் உரையாடும் போது கூறுவார்கள் காலை எழுந்து கடவுளை வணங்கமால் இருந்தால் அன்றைய பொழுதே சரியில்ல என்று […]