சென்னை எழிலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர் விடிய விடிய சோதனை.! உதவி செயற்பொறியாளரிடம் தீவிர விசாரணை.! 

Chennai Ezhilagam

சென்னை எழிலகத்தில் லஞ்சஒழிப்பு துறையினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டு, உதவி செயற்பொறியாளரை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக நீர்வளத்துறை அலுவலகத்தில் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று விடிய விடிய நடைபெற்ற சோதனையில் இறுதியில் அங்கு 2 லட்ச ரூபாய் கணக்கில் காட்டப்படாத தொகை கைப்பற்ற பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நீர்வளத்துறையை சேர்ந்த உதவி செயற்பொறியாளர் பாஸ்கரனை லஞ்சஒழிப்புத்துறையினர் … Read more

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போக்குவரத்தில் அதிரடி மாற்றங்கள்…!

Chennai traffic

 மெட்ரோ பணிகள் காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் சாலை வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல தற்போது மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இன்னும் ஒரு வருடத்திற்கு மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது சென்னை  கலங்கரை விளக்கம் முதல் காந்தி சிலை வரையிலான சர்வீஸ் சாலையில் … Read more

குழந்தை உயிரை காப்பாற்றவே கை அகற்றம்.! விசாரணை அறிக்கையில் தகவல்.!

Raji gandhi hospital

குழந்தை உயிரை காப்பாற்றவே கை அகற்றபட்டது என விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் மற்றும் அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பெயரில் மருத்துவர்கள் குழு விசாரணை மேற்கொண்டது. செவிலியர்களின் அலட்சியத்தால் தான் குழந்தையின் கை அழுகியதாகவும், அதனால் தான் கையை அகற்ற வேண்டிய சூழல் நிலவியதாகவும் குழந்தையின் தயார் புகார் கூறியிருந்தார் அதன்படி தற்போது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், … Read more

சென்னை போக்குவரத்தில் அதிரடி மாற்றங்கள்.. பாடல் இல்லை.. மெரினாவில் வாகன அனுமதியில்லை…

Chennai traffic

சென்னை பிரதான சாலைகளில் இனி பாடல்கள் ஒளிபரப்பட மாட்டாது. மெட்ரோ பணிகள் காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதியில்லை. சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் சாலை வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல தற்போது மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இன்னும் ஒரு வருடத்திற்கு மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவ. த்துள்ள்ளது சென்னை  … Read more

குழந்தையின் கை அகற்றம் -தமிழக அரசிடம் இன்று விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

tamilnadu govt

தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில்,  மருத்துவமனை நிர்வாகம் விசாரணை அறிக்கையை இன்று அரசிடம் சமர்பிக்கிறது.  சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒன்றரை வயது முகமதுமகீர் என்ற குழந்தையின் வலது கை அழுகிய நிலையில் அகற்றப்பட்டது. குழந்தையின் வலது கை அகற்றட்டப்பட்டதாகவும், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தையின் வலது கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றிய விவகாரத்தில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம், நேற்று … Read more

ஒன்றரை வயது குழந்தை கை இழந்த விவகாரம் : சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்த பெற்றோர்.!

Rajiv Gandhi Govt Hospital chennai

ஒன்றரை வயது குழந்தை கை இழந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் பெற்றோர் தஸ்தகிர் – அஜீஷா  தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.  ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமது மஹீர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சையின் போதே சில காரணங்களால் கை அழுகியதன் காரணமாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை … Read more

கலைஞர் நூற்றாண்டு விழா.! 100 இடங்களில் மருத்துவ முகாம்.!

Medical camp

கலைஞர் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிண்டி பல்நோக்கு மருத்துவமனை, திருவாரூர் கலைஞர் கோட்டம் ஆகியவை கலைஞர் பெயரில் திறக்கப்பட்டன. இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. பொது அறுவை சிகிச்சை,  … Read more

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயிலில் இருந்து வெளியேறிய புகை…! பயணிகள் அலறியடித்து ஓட்டம்..!

trains cancelled

சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வெளியேறியதால் அலறியடித்துக் கொண்டு ஓடிய பயணிகள்.  சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கி சென்ற எல்டிடி விரைவு ரயிலில் புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பின் ஏசி பெட்டியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இன்ஜின் ரயில் பெட்டியில் … Read more

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம், ஹூடோரியம் அமைக்க நிதி ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு

tamilnadu government

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை இளம் மனங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புதிய மிருகக்காட்சி சாலை அருங்காட்சியகம், வனவிலங்குகளை புதிய வழியில் கண்டறிய காட்சி மாதிரியுடன் விளக்க வளாகம் அமைக்க ரூ.4 … Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

chennai central railway station

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாநில கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து … Read more