நடுங்க விடும் தங்கம் விலை…சவரனுக்கு ரூ1,120 உயர்ந்து விற்பனை.!

Published by
கெளதம்

Gold Price: நேற்றைய தினம் வரலாறு காணாத அளவில் ரூ.50,000-த்தை தொட்ட தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ1,120 உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

நேற்று சவரன் ஒன்று ரூ.50 ஆயிரத்தை தொட்ட நிலையில், இன்று சவரன் ரூ.51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (29.03. 2024) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.51,120-க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து, கிராமுக்கு 6,390 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி, (28.03. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000க்கு விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50க்கும், கிலோ வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.80,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை..!

ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…

23 minutes ago

பயங்கரவாத தாக்குதல்., காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமித்ஷா!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…

32 minutes ago

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

1 hour ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

2 hours ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

4 hours ago