3-வது நாளாக தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் பங்குச்சந்தை ..! தற்போதையே நிலவரம் இதோ ..!!

Indian Share Market

பங்குச்சந்தை: இந்த வாரம் தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் பெற்றே வருகிறது.

இந்திய அரசியலில், சிறு மாற்றம் ஏற்பட்டதிலிருந்தே இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் பெற்று வருகிறது. அதிலும், கடந்த வாரம் ஒரு சில நாட்கள் பங்குச்சந்தைகள் குறைந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே, அதாவது கடந்த 2 நாட்களாக புதிய உச்சத்தை கண்டுள்ளது. மேலும், இன்றைய நாளிலும் தொடர்ந்து 3-வது இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 சரிவை காணாமல் உச்சம் கண்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நேற்றைய நாளான செவ்வாய்க்கிழமை வர்த்தக நாளின் முடிவில் மும்பை பங்குச்சந்தை (BSE) குறியீடான சென்செக்ஸ் 308.37 புள்ளிகள் உயர்ந்து 77,301.14 புள்ளியிலும், நேஷனல் பங்கு சந்தை (NSE) குறியீடான நிஃப்டி 9230 புள்ளிகள் உயர்ந்து 23,557.90 புள்ளியிலும் முடிவடைந்தன. அதன்பின் இன்று காலை ஆசிய பங்கு சந்தையின் ஏற்றம் காரணமாக தேசிய பங்கு சந்தை (NSE) நிப்ஃடி 30.35 புள்ளிகள் உயர்ந்து 23,558.25 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 102.02 புள்ளிகள் உயர்ந்து 77,403.16 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகம் தொடங்கியது.

அதன்பிறகு சில இறக்கங்களை கண்டு நிலையில் சென்செக்ஸ் 118.65 புள்ளிகள் உயர்ந்து 77,419.79 புள்ளிகளில் வர்த்தகம் தற்போது நடைபெற்று வருகிறது. அதே போல தற்போது சற்று ஏற்ற இறக்கத்தை கண்ட நிப்ஃடி 17.50 புள்ளிகள் சரிவை கண்டு 23,540.30 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் நிறுவனம், கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்கள் பங்குகள் எல்லாம் அதிக லாபம் எட்டியுள்ளன. அதே நேரம் டைட்டன், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், பிபிசிஎல், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனத்தின் பங்குகள் எல்லாம் நட்டத்தை சந்தித்து வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்