பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு சரிவை கண்ட பங்குச்சந்தை ..! முதலீட்டார்கள் ஏமாற்றம் ..!

Stock Market

பட்ஜெட் 2024 : மத்திய பட்ஜெட் தாக்கலில் எல்டிசிஜி வரி உயர்வால் இன்று பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் தாக்கல் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பல முதலீட்டாளர்கள் காத்திருந்த நிலையில் இன்றைய தினம் தொடக்கத்தில் இருந்து தேசிய பங்கு சந்தையின் குறியீடான நிப்டி 50 புள்ளிகள் அதிகரித்து 24,568.90 என்று வர்த்தகம் தொடங்கியது. அதே நேரம் மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸூம் 200 புள்ளிகள் அதிகரித்து 80,724 புள்ளிகளில் வர்த்தகமானது தொடங்கியது.

இந்நிலையில் இன்று காலை 2024-2025 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரானது தொடங்கியது. அதில் LTCG வரி விதிப்பில் மாற்றத்தை அறிவித்தார், இதனால் இந்திய பங்குச்சந்தையானது சில நிமிடங்களிலேயே தொடர் சரிவை சந்திக்க தொடங்கியது.

அதன்படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்து 79,400 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. அதே போல தேசிய பங்கு சந்தையான நிப்டி50 400 புள்ளிகள் சரிந்து 24,220 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. இப்படி பங்குச்சந்தைகள் தொடர் சரிவை சந்திப்பதற்கு மிக முக்கிய காரணமாக எல்டிசிஜி வரி (LTCG long term capital gain tax) 12.5% அதிகரிப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும், படஜெட் தாக்கலில் எல்டிசிஜி வரி உயர்வை கண்டதால் பல முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப பெற்று வருவதாக கூறுகின்றனர். இதனால் இன்றைய நாளில் தொடர்ச்சியாக பங்குச்சந்தை சரிவை சந்தித்து கொண்டே வருகிறது. மேலும், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் முதலீட்டாளருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror