வரலாற்றில் புதிய உச்சம் – சென்செக்ஸ் 531.96 புள்ளிகள் உயர்ந்து, 56,656.68 புள்ளிகளில் வர்த்தகம்!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய பங்கு சந்தையானது ஏற்றம் காணும் என நிபுணர்கள் கூறி வந்த நிலையில், இன்று மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகிறது.

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இன்றும் சற்று ஏற்றம் கண்டுள்ளது.

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 198.72 புள்ளிகள் அதிகரித்து, 56,323.44 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் அதிகரித்து, 16,752.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 321.99 புள்ளிகள் அதிகரித்து, 56,446.71 புள்ளிகளாகவும், நிஃப்டி 103.30 புள்ளிகள் அதிகரித்து, 16,808.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1,535 பங்குகள் ஏற்றத்திலும், 339 பங்குகள் சரிவிலும், 107 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இந்திய பங்குசந்தை புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. அதாவது, சென்செக்ஸ் குறியீட்டு எண் 531.96 (0.95%) புள்ளிகள் உயர்ந்து, 56,656.68 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 152.85 (0.91%) புள்ளிகள் உயர்ந்து, 16,858.05 புள்ளிகளாக காணப்படுகிறது.

இந்திய சந்தையானது ஏற்றம் காணும் என நிபுணர்கள் கூறி வந்த நிலையில், இன்று மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, 22 பைசா அதிகரித்து, 73.46 ரூபாயாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் 73.68 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

மேலும், இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்தில் ஏற்றம் காணப்படும் நிலையில், முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் என்றே சொல்லலாம். ஆசிய சந்தையில் இன்று சில தடுமாற்றம் இருந்தாலும் பெரும்பாலான சந்தைகள் உயர்வுடன் காணப்படுகிறது என்பது குறிப்பித்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…

19 minutes ago

39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…

48 minutes ago

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!

சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…

2 hours ago

அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்!

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி  27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…

2 hours ago

கலைஞர் நூற்றாண்டு அகாடமி : பாக்ஸிங்-ஐ கண்டு கழித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை :  சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…

2 hours ago

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…

2 hours ago