இன்று காலை இந்திய பங்குசந்தையில் சென்செக்ஸ் குறியீடு எண் அதிகப்படியாக 55,781 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது.
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 133.81 புள்ளிகள் அதிகரித்து, 55,463.13 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 104.50 புள்ளிகள் அதிகரித்து, 16,555 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் குறியீடு எண் 384.11 புள்ளிகள் அதிகரித்து, 55,713.43 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111.60 புள்ளிகள் அதிகரித்து, 16,562.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,085 பங்குகள் ஏற்றத்திலும், 507 பங்குகள் சரிவிலும், 115 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது. பிட்காயின் மதிப்பு 50000 டாலரை தொட்டு உள்ளது.
இதற்கிடையில் தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 135.64 (0.25%) புள்ளிகள் அதிகரித்து, 55,464.96 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21.25 (0.13%) புள்ளிகள் அதிகரித்து, 16,471.75 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. பங்குச்சந்தை வார தொடக்க நாள் என்பதால் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இன்று காடில்லா நிறுவனஹெல்த்கேர் பங்குகள் 7% வரையில் காலையில் அதிகரித்து காணப்பட்டது. இது நிறுவனம் அவசர தேவைக்கு (EUA) பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், இந்த பங்கின் விலையானது அதிகரித்து வருகிறது. தற்போது இந்த பங்கின் விலையானது 3.37% அதிகரித்து, 551 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…