GOLD: அட்சய திருதியையொட்டி நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1240 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,240 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.54,160க்கு விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்தும் பொதுமக்களிடையே வாங்கும் ஆர்வம் குறையவில்லை.
இந்நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.16,000 கோடிக்கு (24,000 கிலோ) தங்கம் விற்பனையானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 4,000 கிலோ அதிகமாகும்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (11-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,000க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,750க்கும் விற்பனையாகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ரூ.90.50க்கும், கிலோ ரூ.90,500க்கும் விற்கப்படுகிறது.
சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…
மும்பை : இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் சர்பராஸ் கான் சகோதரரும், மகாராஷ்டிரவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரருமான…
சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது.…
சென்னை : கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, சென்னையின் புறநகர்ப்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…