மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.77 புள்ளிகள் சரிந்து, 54,294.89 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடன் துவங்கினாலும், முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் தற்போது சரிவுக்கு தள்ளப்பட்டது. அதன்படி, சென்செக்ஸ் குறியீடு 375.17 புள்ளிகள் குறைந்து, 54,179.49 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதுபோன்று, நிஃப்டி குறியீடு 82.85 புள்ளிகள் குறைந்து, 16,197.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக பங்குகளை விற்பனை செய்யப்பட்டும் காரணத்தால் முக்கிய நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 5 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் காணப்படுகிறது.
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 39.71 புள்ளிகள் அதிகரித்து, 54,594.37 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 5.10 புள்ளிகள் அதிகரித்து, 16,285.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதில் 1099 பங்குகள் ஏற்றத்திலும், 760 பங்குகள் சரிவிலும், 84 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று ஏற்றம் கண்டு, 74.38 ரூபாயாக காணப்படுகிறது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…