பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 61,773 புள்ளிகளாக வர்த்தகம்..!

Sensex 1

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 197.07 புள்ளிகள் உயர்ந்து 61,773 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,238 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த 2 நாட்களாக 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தக நாளில் 61,937 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 213.02 புள்ளிகள் அல்லது 0.35% என உயர்ந்து 61,757 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 56.50 புள்ளிகள் அல்லது 0.31% சரிந்து 18,238 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,560 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,181 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து லாபம் பார்த்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.18,617 கோடி முதலீடு செய்துள்ளனர்.

பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. மஹிந்திரா & மஹிந்திரா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்