sensex falls [Image source : economictimes/Getty Images]
விநாயகர் சதுர்த்தி விழாவானது நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், வர்த்தகங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. இன்று விடுமுறை முடிந்த நிலையில், 67,080 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் காலை 10 மணியளவில், 453.91 புள்ளிகள் சரிந்து 67,142.93 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
முந்தைய வாரங்களில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், இந்த வார வர்த்தக நாளில் வீழ்ச்சியுடனே வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, இன்றும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கிய சென்செக்ஸ், இப்போது 700 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி, 141.90 புள்ளிகள் சரிந்து 19,991.40 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. ஆனால் இப்போது 200 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. இந்த வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரம் முதல் முறையாக நிஃப்டி 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் பங்குச்சந்தையானது வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருவதாக கூறப்படுகிறது. இன்று இரவு அமெரிக்க மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் ஆனது அறிவிக்கப்படவுள்ளது. அந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் முதலீட்டார்கள் தங்களது பங்குகளில் மாறுபாடுகளை செய்கின்றனர்.
இதனால் ஒரே இரவில், அமெரிக்க குறியீடுகள் 0.3 சதவீதம் வரை சரிந்தன. அதோடு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஆனது கடந்த மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்து 93 டாலர் ஆக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். இத்தகைய காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மேலும், தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 636.41 புள்ளிகள் சரிந்து 66,960.43 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 178.10 புள்ளிகள் சரிந்து 19,955.20 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 67,596 புள்ளிகளாகவும், நிஃப்டி 20,133 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…