வணிகம்

Stock Market: கடும் சரிவில் இந்தியப் பங்குச்சந்தை.! சென்செக்ஸ் 700 புள்ளிகள் வீழ்ச்சி.!

Published by
செந்தில்குமார்

விநாயகர் சதுர்த்தி விழாவானது நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், வர்த்தகங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. இன்று விடுமுறை முடிந்த நிலையில், 67,080 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் காலை 10 மணியளவில், 453.91 புள்ளிகள் சரிந்து 67,142.93 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.

முந்தைய வாரங்களில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், இந்த வார வர்த்தக நாளில் வீழ்ச்சியுடனே வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, இன்றும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கிய சென்செக்ஸ், இப்போது 700 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி, 141.90 புள்ளிகள் சரிந்து 19,991.40 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. ஆனால் இப்போது 200 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. இந்த வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரம் முதல் முறையாக நிஃப்டி 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் பங்குச்சந்தையானது வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருவதாக கூறப்படுகிறது. இன்று இரவு அமெரிக்க மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் ஆனது அறிவிக்கப்படவுள்ளது. அந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் முதலீட்டார்கள் தங்களது பங்குகளில் மாறுபாடுகளை செய்கின்றனர்.

இதனால் ஒரே இரவில், அமெரிக்க குறியீடுகள் 0.3 சதவீதம் வரை சரிந்தன. அதோடு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஆனது கடந்த மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்து 93 டாலர் ஆக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். இத்தகைய காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மேலும், தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 636.41 புள்ளிகள் சரிந்து 66,960.43 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 178.10 புள்ளிகள் சரிந்து 19,955.20 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 67,596 புள்ளிகளாகவும், நிஃப்டி 20,133 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

19 minutes ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

56 minutes ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

2 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

2 hours ago

“பாஜக மாநிலத் தலைவர் பணிகள் எனக்கு இருக்காது!” அண்ணாமலை மீண்டும் திட்டவட்டம்!

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…

3 hours ago

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!

சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…

3 hours ago