அதிர்ச்சி : ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2 லட்சம்…! அதிர்ச்சியில் பெண்கள்..!

இலங்கையில் அதிகபட்சமாக ஒரு சவரன் ரூ.1.35 லட்சத்திற்கு செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு சவரன் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் காணப்படும் விலை உயர்வு காரணமாக சிலர் இந்தியாவுக்கு அகதிகளாக வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் ஒரு சவரன் நகை ரூ.2 லட்சமாக அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகபட்சமாக ஒரு சவரன் ரூ.1.35 லட்சத்திற்கு செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு சவரன் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.