Categories: வணிகம்

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.! மஹிந்திரா நிறுவன பங்குகள் 2.50% உயர்வு.!

Published by
செந்தில்குமார்

இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சென்ற வாரத்தில் இரண்டு நாட்கள் ஏற்றமடைந்திருந்தாலும், மற்ற அனைத்து நாட்களிலும் இறக்கத்தில் வர்த்தகமானது. இதனால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவை நோக்கி சென்றது.

முந்தைய நாட்களை போலவே இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 65,101.95 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 65.30 புள்ளிகள் குறைந்து, 64,910.67 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 6.30 புள்ளிகள் குறைந்து 19,437.20 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 64,975.61 புள்ளிகளாவும், நிஃப்டி 19,443.50 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.15 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 79.69 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 31.00 அல்லது 0.49% உயர்ந்து ரூ.6,305 ஆக விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. அதன்படி, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (+2.50%), டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (+1.32%), இண்டஸ் இண்ட் வங்கி (+0.92%), மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (+0.81%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (+0.82%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

டெக் மஹிந்திரா லிமிடெட் (-0.98%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (-0.65%), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் (-0.62%), சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் (-0.56%)
உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

10 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

39 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago