முக்கியச் செய்திகள்

வாரத்தின் 3வது நாளில் ஏற்றமடைந்த சென்செக்ஸ்.! 24 நிறுவங்களின் பங்குகள் உயர்வு.!

Published by
செந்தில்குமார்

தீபாவளிக்கு முந்தைய நாளிலிருந்து ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, தீபாவளி சிறப்பு வர்த்தக நாளிலும் ஏற்றத்துடன் இருந்தது. ஆனால் தீபாவளிக்கு மறுநாள் பங்குச்சந்தை சரிவை சந்தித்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்று சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 60 புள்ளிகள் வரை சரிந்தும் வர்த்தகமானது. வாரத்தின் முதல் நாளிலேயே அதுவும் தீபாவளி முடிந்த பிறகு பங்குச்சந்தை சரிவை சந்தித்திருப்பது முதலீட்டாளர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பங்குச்சந்தை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 65,461.54 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்தும், நிஃப்டி 150 புள்ளிகள் வரை உயர்ந்தும் வர்த்தகமாகி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 621.94 புள்ளிகள் உயர்ந்து, 65,555.81 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 191.50 புள்ளிகள் உயர்ந்து 19,631.60 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 64,933.87 புள்ளிகளாவும், நிஃப்டி 19,443.55 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.22 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 82.69 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 8.00 அல்லது 0.12% உயர்ந்து ரூ.6,516 ஆக விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. அதன்படி, டெக் மஹிந்திரா லிமிடெட் (+3.51%), இன்ஃபோசிஸ் லிமிடெட் (+2.09%), விப்ரோ லிமிடெட் (+1.87%), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் (+1.85%), டாடா ஸ்டீல் லிமிடெட் (+1.78%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (-0.11%), இண்டஸ் இண்ட் பேங்க் லிமிடெட் (-0.13%), மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (-0.06%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (-0.64%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

11 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

11 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

12 hours ago