Sensex Rise [Image source : Moneycontrol]
இந்த வாரத் தொடக்கம் முதல் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, மூன்று நாட்களாக சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது. இது நேற்று 900 புள்ளிகளாக மாறியது. அதே போல நிஃப்டி 260 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது.
பங்குச்சந்தையின் சரிவினால் நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், வாரத்தின் ஐந்தாவது வர்த்தக நாளான இன்று யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றமடைந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
அதன்படி, ஐந்தாவது வர்த்தக நாளான இன்று 63,559 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 501.75 புள்ளிகள் உயர்ந்து 63,649.90 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 128.35 புள்ளிகள் உயர்ந்து 18,985.60 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாளில் 63,774 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 900.91 புள்ளிகள் குறைந்து 63,148.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதோடு, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 264.90 புள்ளிகள் குறைந்து 18,857.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மேலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.10 டாலர் விலை உயர்ந்து 89.03 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 94.00 அல்லது 1.35% உயர்ந்து ரூ.7,039 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.
இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…