Categories: வணிகம்

ஐந்தாவது நாளாக சரிந்த சென்செக்ஸ்.! 65,397.62 புள்ளிகளாக நிறைவு.!

Published by
செந்தில்குமார்

கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, இந்த வாரத்தில் முதல் இரண்டு நாட்களில் ஏற்றத்துடன் வர்த்தகமானது. ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கி வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தக நாளில் பங்குச்சந்தை ஏற்றமடையும் என்று முதலீட்டாளர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் பங்குச்சந்தை சரிவுடனே வர்த்தகமானது. அதன்படி, இன்று 65,484 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், வர்த்தக நாளின் முடிவில் 231.62 புள்ளிகள் சரிந்து 65,397.62 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஆனால், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 82.05 புள்ளிகள் உயர்ந்து 19,542.65 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

முந்தைய வர்த்தக நாளில் 65,484 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 247.78 புள்ளிகள் சரிந்து 65,629.24 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 46.40 புள்ளிகள் சரிந்து 19,624.70 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இவ்வாறு பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைவதற்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. தற்போது, பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.95 டாலர் விலை உயர்ந்து 93.33 டாலராக விற்பனையாகி வருகிறது.

மேலும், சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 108.00 அல்லது 1.47 சதவீதம் குறைந்து ரூ.7,438 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அரசியலில் மீண்டும் குரல்கொடுத்த விஷால்.! மத்திய அரசு மீது சரமாரி கேள்விகள்…அரசியலில் மீண்டும் குரல்கொடுத்த விஷால்.! மத்திய அரசு மீது சரமாரி கேள்விகள்…

அரசியலில் மீண்டும் குரல்கொடுத்த விஷால்.! மத்திய அரசு மீது சரமாரி கேள்விகள்…

சென்னை : அண்மையில் தமிழ் பத்திரிகை தளங்களில் ஒன்றான ஆனந்த விகடன் குழுமத்தில் விகடன் இணையதளம் ஓர் கார்ட்டூன் சித்திரத்தை…

8 hours ago
அட்ராசக்கை.! 30,000 ரூபாய் அதிரடி தள்ளுபடி! எப்போது வரை தெரியுமா? காவஸாக்கி நிஞ்ஜா 300 அட்டகாச ஆஃபர்!அட்ராசக்கை.! 30,000 ரூபாய் அதிரடி தள்ளுபடி! எப்போது வரை தெரியுமா? காவஸாக்கி நிஞ்ஜா 300 அட்டகாச ஆஃபர்!

அட்ராசக்கை.! 30,000 ரூபாய் அதிரடி தள்ளுபடி! எப்போது வரை தெரியுமா? காவஸாக்கி நிஞ்ஜா 300 அட்டகாச ஆஃபர்!

டெல்லி : இந்திய இருசக்கர வாகன மோட்டார் சந்தையில் யமஹா R3, KTM 390 RC, டிவிஎஸ் அப்பாச்சி RR310,…

9 hours ago
“தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்துகிறது. இதுதான் லட்சணமா?” அண்ணாமலை பரபரப்பு வீடியோ!“தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்துகிறது. இதுதான் லட்சணமா?” அண்ணாமலை பரபரப்பு வீடியோ!

“தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்துகிறது. இதுதான் லட்சணமா?” அண்ணாமலை பரபரப்பு வீடியோ!

சென்னை : தேசிய கல்வி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழக அரசியலில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேசிய…

10 hours ago

நாதாண்டா மாஸ்… சாம்பியன்ஸ் டிராஃபிக்கு பாரம்பரிய டச் கொடுத்த கேன் மாமா.! வேட்டியில் வைரல் வீடியோ…

பாகிஸ்தான் : பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு நியூசிலாந்து அணி தயாராகி…

10 hours ago

பிப்.25-ல் தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 25 ஆம் தேதி கோவை வருகிறார். அங்கு மாவட்ட…

12 hours ago

“அந்த உரிமை யாருக்கும் கிடையாது! போர் குணம் குறையவில்லை!” சீரிய கனிமொழி!

சென்னை :  உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வி…

12 hours ago