உச்சம் பெற்று சாதனை படைத்தும் ..லாபத்தை ஈட்ட தவறிய சென்செக்ஸ்!

Published by
அகில் R

சென்செக்ஸ் : பங்குசந்தை வரலாற்றில் புள்ளிகள் இதுவரை காணாத உச்சம் பெற்றதோடு நாளின் முடிவில் லாபத்தை எட்டவும் தவறி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பரபரப்புகள் சற்று தணிந்து இருக்கும் நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக சென்செக்ஸ் புள்ளிகள் உச்சம் பெற்றுள்ளது. ஆனாலும் தேர்தல் ரிசல்ட் வரும் வரையிலும் பங்குசந்தையின் போக்கு என்பது அதிக ஏற்ற, இறக்கத்துடந்தான் இருக்கும் என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், வெகு நாட்களுக்கு பிறகு நேற்றைய நாளில் நிஃப்டி 50 1% சதவீதம் அதிகரித்து புதிய உச்சமான 22,806. 20 புள்ளிகள் கடந்த நிலையில் அது இன்றைய நாளின் பரிவர்த்தனையில் மீண்டும் உச்சம் கண்டு 23,000த்தை கடந்து தற்போது 24,000த்தை நோக்கி நகர்ந்து வருகின்றது. இது விரைவில் 24,000த்தை தொட்டு விடும் என்று ஒரு சில முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

வர்த்தக நேரம் முடிவில் மும்பை சென்செக்ஸானது 8 புள்ளிகள் குறைந்து 75,410 புள்ளிகளில் நிறைவு பெற்றது. வர்த்தகம் இடையே 59 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்ந்தபோதும் கடைசியில் 8 புள்ளிகள் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 23,026 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை.

இன்றைய நாளின் வர்த்தக நேரம் முடிவில் நிஃப்டி 11 புள்ளிகள் குறைந்து 22,957 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. இதனால் மிகுந்த லாபம் ஈட்டவும் தவறி இருக்கிறது. நிஃப்டி 50 குறியீட்டில் 17 பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவடைந்தன, HDFC வங்கி, பார்தி ஏர்டெல், பிபிசிஎல் (BPCL), எல்&டி(L&T) மற்றும் அல்ட்ரா டேக் சிமெண்ட் (UltraTech Cement) ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.

ஆனால் அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, மஹிந்திரா&மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் டைட்டன் பங்குகள் நிஃப்டி 50 குறியீட்டில் அதிக சரிவை பதிவு செய்துள்ளன.

Published by
அகில் R

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago