ஏறுமுகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.!
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,200-க்கும், ஒரு கிராம் ரூ.7,650-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 4ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 4 தினங்களில் தங்கம் விலை 1,680 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 22 ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,145 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,160க்கு விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,200-க்கும், ஒரு கிராம் ரூ.7,650-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.