1,76,000 கோடி ருபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிக்க உள்ள ரிசர்வ் வங்கி!

Published by
மணிகண்டன்

நம் நாட்டு நிதி நிலைமையை சரிகட்டவும்,  பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரவும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து உபரி நீதியை வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசானது பெறுவது வழக்கம்.

இந்த உபரி நிதி மற்ற நாடுகளில் 14% வைத்திருக்கப்படும். நம் நாட்டின் உபரி நிதி அளவானது 28 சதவீதமாக உள்ளது. இந்த உபரி நிதியை மத்திய அரசு கோரி இருந்ததால் தான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுர்ஜித் படேல் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நம் நாட்டில் எவ்வளவ உபரி நிதியை வைத்துக் கொள்ளலாம் என வரையறுக்க மத்திய அரசானது, இதனை கலந்தாலோசிக்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பீமல் ஜாலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவானது, கடந்த வருடம் டிசம்பர் முதல் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவுகளை பீமல் ஜாலான் தலைமையிலான குழு, கடந்த 14-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம்  ஒப்படைத்தது. இதனை நேற்று மும்பையில் ரிசர்வ் வங்கியின் முக்கிய நிர்வாகிகளுடன் ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் கலந்தாலோசித்து உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுக்க ஒப்புதல் வழங்கினர்.

இதன்மூலம் 2018 – 2019 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயும், மாற்றியமைக்கப்பட்ட பொருளாதார முதலீட்டு வழிகாட்டுதலின்படி கண்டறியப்பட்ட உபரி நிதி 53 ஆயிரம் கோடி ரூபாயும் சேர்த்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பல தவணைகளாக ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு பெற உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 3.3 சதவீதமாக தக்கவைக்கப்படும என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago