நம் நாட்டு நிதி நிலைமையை சரிகட்டவும், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரவும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து உபரி நீதியை வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசானது பெறுவது வழக்கம்.
இந்த உபரி நிதி மற்ற நாடுகளில் 14% வைத்திருக்கப்படும். நம் நாட்டின் உபரி நிதி அளவானது 28 சதவீதமாக உள்ளது. இந்த உபரி நிதியை மத்திய அரசு கோரி இருந்ததால் தான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுர்ஜித் படேல் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நம் நாட்டில் எவ்வளவ உபரி நிதியை வைத்துக் கொள்ளலாம் என வரையறுக்க மத்திய அரசானது, இதனை கலந்தாலோசிக்க முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பீமல் ஜாலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவானது, கடந்த வருடம் டிசம்பர் முதல் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவுகளை பீமல் ஜாலான் தலைமையிலான குழு, கடந்த 14-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்தது. இதனை நேற்று மும்பையில் ரிசர்வ் வங்கியின் முக்கிய நிர்வாகிகளுடன் ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் கலந்தாலோசித்து உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுக்க ஒப்புதல் வழங்கினர்.
இதன்மூலம் 2018 – 2019 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயும், மாற்றியமைக்கப்பட்ட பொருளாதார முதலீட்டு வழிகாட்டுதலின்படி கண்டறியப்பட்ட உபரி நிதி 53 ஆயிரம் கோடி ரூபாயும் சேர்த்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய அரசுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பல தவணைகளாக ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசு பெற உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 3.3 சதவீதமாக தக்கவைக்கப்படும என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…