ரிசர்வ் வங்கி ஆளுநரை ராஜினாமா செய்ய வைக்க மத்திய அரசு தீவிர முயற்சி ..!முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
உர்ஜித் சிங் படேலை ராஜினாமா செய்ய வைக்க மத்திய அரசு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் அவர் கூறுகையில், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அதுவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.அதேபோல் ரிசர்வ் வங்கி ஆளுநர், உர்ஜித் சிங் படேலை ராஜினாமா செய்ய வைக்க மத்திய அரசு மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற மத்திய அரசின் திட்டம் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட திட்டம்.ஆனால் அதனை பாஜக அரசு பெயர் மாற்றி ஜன்தன் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது ரூபாய் நோட்டு நடவடிக்கையின் போது ஜன்தன் வங்கி கணக்குகளில் 42 ஆயிரம் கோடி ரூபாய் பணம் திடீரென எப்படி வந்தது என்றே தெரியவில்லை என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.