48 நாள்களுக்கு பிறகு பெட்ரோல் விலையில் மாற்றம் .!

Default Image

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு  ரூ.83.75 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.78.86க்கு விற்பனையாகிறது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு இருந்தது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை 48 நாள்களுக்கு பிறகு இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 83.75 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதைபோல் டீசல் லிட்டருக்கு விலை மாற்றமின்றி, 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று பெட்ரோல், லிட்டர் 83.63 ரூபாய், டீசல் லிட்டர் 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்