ஏறுமுகத்தில் இன்றைய நிலவரம் இதோ!

Default Image

சென்னையில் இன்று ( 15.07.2020)  பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.78.22க்கும் விற்பனை ஆகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக  குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.

இந்நிலையில், 16வது நாளாக இன்றும், பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாளாக டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் நேற்று டீசல் லிட்டருக்கு 78.11 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 11 காசுகள் அதிகரித்து 78.22 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் விலை கடந்த 13 நாட்களாக இவ்விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்