தொடர்ந்து 8-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 8வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது .உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்ததாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்கப்பட்டது. அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகமாகிக்கொண்டேதான் செல்கிறது.
அந்த வகையில் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 54 காசு உயர்ந்து, ரூ.79.53 க்கும் ,டீசல் விலை 54 பைசா உயர்ந்து ரூ.72.18-க்கு விற்பனையாகிறது.