வரி எய்ப்பு புகார்.! அதானி குழும நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை.!

Default Image

இமாச்சல பிரதேசத்தில் வரி எய்ப்பு செய்த் புகார் தொடர்பாக அதானி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

அதானி குழும விவகாரம் தான் தற்போது நாடு முழுவதும் பேசு பொருளாக இருந்து வருகிறது. அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க்  நிறுவனத்தின் அறிக்கையை அடுத்து அதானி குழுமத்திற்கு சொந்தமான பங்குகள் விறுவிறுவென சரிந்தது. இதன் காரணமாக அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் டாப் 10இல் இருந்து வெளியேறினார்.

மேலும், அதானி பங்குகளில் எல்ஐசி முதலீடு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். உச்சநீதிமன்றத்தில் அதானி குழும விவகாரம் தொடர்பாக நாளை விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் அதானி குழுமத்திற்கு சொந்தமான வில்மர் நிறுவனமானது ஜிஎஸ்டி வரியில் முறைகேடு செய்து வரி எய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரை அடுத்து, இமாச்சல பிரதேசத்தில் உள்ள வில்மர் நிறுவன இடங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்