புதிய உச்சத்தைத் தொட்டது மும்பை பங்குச்சந்தை!

Default Image
தற்போதைய நிலவரப்படி  34,332 புள்ளிகளுடன் புதிய உச்சத்தைத் தொட்டது மும்பை பங்குச்சந்தை .

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் ஏற்றங் கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 178புள்ளிகள் உயர்ந்து 34ஆயிரத்து 332என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 47புள்ளிகள் உயர்ந்து 10ஆயிரத்து 606 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது.
லாபமீட்டும் எனக் கருதப்படும் பங்குகளைச் சில்லறை முதலீட்டாளர்கள் பெருமளவில் வாங்கியதே பங்குச்சந்தை ஏற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11காசுகள் உயர்ந்து 63ரூபாய் 26காசுகளாக இருந்தது. ஏற்றுமதியாளர்களும் வங்கிகளும் அமெரிக்க டாலரைப் பெருமளவில் விற்றதே ரூபாய் மதிப்பு உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்