5 லட்சம் கோடியை வெறும் 30 நிமிடத்தில் இழந்த மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்…!

Published by
Edison

மும்பை பங்குச்சந்தையில்,சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவு காரணமாக,முதலீட்டாளர்கள் 5 லட்சம் கோடியை வெறும் 30 நிமிடத்தில் இழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலையானது கடந்த ஆண்டை விட மிகத் தீவிரமாக பரவி வருகிறது.மேலும்,தொற்றினால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள்கூட இல்லாமல் பல்வேறு மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இதன் காரணமாக,நாட்டின் பங்குச்சந்தை மிக அதிக அளவிலான பாதிப்பை எதிர்கொள்கின்றன.எனவே,பங்குச்சந்தையின் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர்.

இதனையடுத்து,நேற்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1200 புள்ளிகளுக்கும்  அதிகமான சரிவைக் கண்டது.இதனால் முதலீட்டாளர்கள்,வெறும் 30 நிமிடத்திற்குள் சுமார் 5 லட்சம் கோடி அளவிலான முதலீட்டு சரிவை எதிர்கொண்டனர் .

எனினும்,அதன் பின்னர் வர்த்தகம் மிகக் கணிசமான வளர்ச்சி அடைந்து சென்செக்ஸ் குறியீடு 47,949.42 புள்ளிகளும்,நிஃப்டி குறியீடு 14,359.45 புள்ளிகளும் பெற்று நேற்றைய வர்த்தகம்  நிறைவடைந்துள்ளது.

இருப்பினும்,மும்பை பங்குச்சந்தை சரிவின் எதிரொலி காரணமாக முதலீட்டாளர்கள் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களில் இருக்கும் தங்களது முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.

 

Published by
Edison

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago