Indian stock market : இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவை கண்ட நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே சென்செஸ் மற்றும் நிஃப்டி உயர்வை கண்டு வருகிறது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளர்கள் தற்போது பெரும் நிம்மதியாக உள்ளனர்.
இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்வுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண் 1.4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அதன்படி, நண்பகல் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1073.72 புள்ளிகள் உயர்ந்து, 73,574 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 321 புள்ளிகள் அதிகரித்து 22,304 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. எனவே, நண்பகல் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த புதிய உச்சம் நஷ்டத்தில் இருந்த முதலீட்டாளருக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்றும் அடுத்த வாரம் இன்னும் இந்திய பங்குச்சந்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா…