சரிந்தது இந்திய பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 63,168 புள்ளிகளாக நிறைவு..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 216.28 புள்ளிகள் குறைந்து 63,168 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,755 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை, வாரத்தின் முதல் நாளான இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய வர்த்தக நாளில் 63,474 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 216.28 புள்ளிகள் அல்லது 0.34% என குறைந்து 63,168 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 70.55 புள்ளிகள் அல்லது 0.37% குறைந்து 18,755 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 63,384 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,826 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.