வெளிநாடுகளில் எம்.பி. மற்றும் மேயர்களாக இருக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் 23 நாடுகளில் பதவியில் இருக்கும் 140க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள், மேயர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினர் அவரவர் வாழும் நாடுகளில் கொள்கை வடிவமைப்பு, அரசியல் ஆகியவற்றில் பங்கெடுப்பதால், இந்தியர்கள் பெருமை கொள்வதாக தெரிவித்தார். 21ஆம் நூற்றாண்டை மனதில் கொண்டு, போக்குவரத்து மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா தனது முதலீட்டை அதிகரித்து இருப்பதாக கூறிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் பாதிக்கும் மேற்பட்ட முதலீடு, கட்டுமானம், வான் போக்குவரத்து, சுரங்கம், மின்சாதனப் பொருட்கள், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். இந்திய குடிமக்கள் மட்டுமின்றி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மீது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அதிக அக்கறை காட்டி வருவதாக கூறிய அவர், ஒரு நாளின் 24 மணி நேரமும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்சனைகளை அறிந்து, அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
source: dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…