அதிகரித்த பங்குச்சந்தை முதலீடு..! சென்செக்ஸ் 62,345 புள்ளிகளாக நிறைவு..!

StockMarkets

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 317.81 புள்ளிகள் உயர்ந்து 62,345 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,398 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய வர்த்தக நாளில் 62,157 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 317.81 புள்ளிகள் அல்லது 0.51% என உயர்ந்து 62,345 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 84.05 புள்ளிகள் அல்லது 0.46% உயர்ந்து 18,398 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 62,027 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,314 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. மாருதி சுசுகி இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன

மேலும், அந்நிய முதலீட்டாளர்கள் செய்த முதலீடு கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.18,617 கோடி முதலீடு செய்துள்ளனர். இதுவே பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்