ICICI வங்கியின் எம்.டி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் விளக்கத்தில் திருப்தியில்லை…!சி.பி.ஐ தகவல் …!

Default Image

சி.பி.ஐக்கு,  ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் எம்.டி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்துக்கு மொரிசியசில் இருந்து 325கோடி ரூபாய் நிதி பெற்றது குறித்து அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தி அளிக்கவில்லை. வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கியதில் ஐசிஐசிஐ  வங்கி மேலாண் இயக்குநர் சாந்தா கோச்சாரின் குடும்பம் கைமாறு பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாகச் சாந்தாவின் கணவர் தீபக் கோச்சாரிடம் விசாரித்த வருமானவரித் துறையினர், மொரிசியசைச் சேர்ந்த 2 நிறுவனங்களிடம் இருந்து நியூ பவர் ரினீயுவபில்ஸ் நிறுவனத்துக்கு 325கோடி ரூபாய் நிதி பெறப்பட்டது குறித்து விளக்கம் கேட்டனர். இது தொடர்பாகத் தீபக் கோச்சார் அளித்த விளக்கம் வருமான வரித்துறையினருக்குத் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நியூபவர் ரினீயுவபில்ஸ், தீபக் கோச்சார் ஆகியோரின் வருமான வரி அறிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர். மொரிசியஸ் நிறுவனங்களுக்கும் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத்துக்கும் தொடர்புள்ளதா என்பதையும் வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்