அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…. சவரனுக்கு ரூ.56 உயர்வு..!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.34,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.7 உயர்ந்து 4,293-க்கு விற்பனை.
பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே குறைந்து வருவதால் மக்கள் உற்சாகமாக தங்கத்தை வாங்கி வந்தனர், ஆனால் இன்று தங்கம் விலை உயர்ந்தது.
அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.34,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.7 உயர்ந்து 4,293-க்கு விற்பனை.
அதைபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமிற்கு 1.10 உயர்ந்து ரூ.73-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.