சென்னையில் ஏற்கெனவே 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.31,000 கடந்து விற்பனையாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) ரூ.3,889க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று ரூ.35 அதிகரித்து, ரூ.3,924க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நேற்று ரூ.31,112க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 280 ரூபாய் ஒரே நாளில் உயர்ந்து ரூ.31, 392க்கு விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 200 ரூபாய் உயர்ந்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சவரனுக்கு ரூ. ரூ.31, 392க்கு மேல் தங்கம் விற்கப்படுவதால் சுபமுகூா்த்த நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளா்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…